போலி ஆவணம் மூலம் சிம் கார்டு... மாவோயிஸ்ட் ரூபேஷுக்கு மேலும் 10 நாள் சிறை- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சிவகங்கை: மாவோயிஸ்ட் ரூபேஷை மேலும் 10 நாள் சிறையில் அடைக்க இளையான்குடி குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற வளாகத்தில் மாவோயிஸ்டுகளுக்கு ஆதரவாக ரூபேஷ் கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சிவகங்கை மாவட்டம், தாயமங்கலம் இடையவயலைச் சேர்ந்தவர் நேரு(50). விவசாயியான இவரது ரேஷன் கார்டின் ஜெராக்ஸ் நகலை பயன்படுத்தி, கேரளா மாவோயிஸ்ட் ரூபேஷ், பல இடங்களில் சிம் கார்டு வாங்கி தீவிரவாத செயல்பாடுகளுக்கு பயன்படுத்தியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, நேரு, இளையான்குடி போலீசில் ரூபேஷ் மீது புகார் கொடுத்தார். இந்த வழக்கு இளையான்குடி நீதிமன்றத்தில் நடக்கிறது.
வீடியோ












Click it and Unblock the Notifications