பாரத் பந்த்: சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்திய ஸ்டாலின் கைது- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என கடந்த 8 ந்தேதி மத்திய அரசு அதிரடியாக அறிவித்தது. இதனால் நாள்தோறும் மக்கள் பல்வேறு பிரச்சினைகளைச் சந்தித்து வருகின்றனர். எனவே, மக்களைக் குழப்பி வரும் மத்திய அரசை கண்டித்தும், பொதுமக்களின் சிரமங்களை தீர்க்க கோரியும் திமுக சார்பில் இன்று தமிழகம் முழுவதும் மத்திய அரசு அலுவலகத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், சென்னை பாரிமுனை ராஜாஜி சாலையில் உள்ள இந்தியன் வங்கி தலைமை அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் தலைமை வகித்தார். இதில் ஏராளமான திமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர். அப்போது, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஸ்டாலின் உள்பட திமுகவினர் பலரை போலீசார் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications