காவிரி நீர் கேட்டு கர்நாடகா வங்கி முற்றுகை: நாம்தமிழர் கட்சியினர் போராட்டம் - வீடியோ
Subscribe to Oneindia Tamil
சேலம்: காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவைக் கண்டித்து, கர்நாடகத்தில் நேற்று பந்த் நடைபெற்றது. இந்நிலையில், சேலம் புது பஸ் நிலையம் அருகே செயல்பட்டு வரும் கர்நாடகா வங்கியை முற்றுகையிட்டு நாம் தமிழர் கட்சியினர் போராட்டம் நடத்தினர். கர்நாடக அரசியல் கட்சியினரின் செயலை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் முழக்கமிட்டனர். மேலும் கர்நாடகா அரசியல் கட்சியினரின் கொடிகளை கிழித்து எரிந்தும், செருப்பால் அடித்தும் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 60 பேரை போலீசார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications