100 பேருக்காக 120 கோடி மக்களுக்கு தண்டனையா... மோடியின் முடிவு குறித்து நாராயணசாமி கருத்து- வீடியோ
Subscribe to Oneindia Tamil
புதுச்சேரி: புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில், அம்மாநில முதல்வர் நாராயணசாமி போட்டியிடுகிறார். இதற்காக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள அவர், நேற்று காலை வேல்முருகன் நகரில் வாக்கு சேகரித்தார். அப்போது செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர், "500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் முடிவு ஏற்புடையதல்ல. பிரதமர் மோடி தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்" என்றார். மேலும், கருப்புப் பணம் வைத்துள்ள 100 பேரைப் பிடிப்பதற்காக நாட்டிலுள்ள 120 கோடி மக்கள் பாதிக்கப்படக்கூடாது எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications