நன்றி.. நன்றி... நன்றி... நெல்லித்தோப்பு வெற்றியால் புதுவை முதல்வர் நாராயணசாமி நெகிழ்ச்சி- வீடியோ
புதுச்சேரி: புதுச்சேரி நெல்லித்தோப்பு இடைத்தேர்தலில் வெற்றி பெற்று தனது முதல்வர் பதவியை தக்க வைத்துக் கொண்டுள்ளார் நாராயணசாமி. தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஓம்சக்தி சேகரை 11,183 வாக்கு வித்தியாசத்தில் வீழ்த்தி, 18,709 வாக்குகள் பெற்று நாராயணசாமி வெற்றி பெற்றுள்ளார். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தேர்தல் அதிகாரிகளைச் சந்தித்து தனது வெற்றிச் சான்றிதழை அவர் பெற்றார். அப்போது செய்தியாளர்கள் மத்தியில் பேசிய நாராயணசாமி, "என் மீது நம்பிக்கை வைத்து அவர்கள் ஓட்டளித்துள்ளனர். இதற்காக அவர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். மக்களின் அடிப்படை தேவைகளை தீர்த்து வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மக்கள் எனக்கு ஆதரவு தெரிவித்து இருக்கிறார்கள். அவர்களுடைய தேவைகளை நான் நிச்சயம் நிறைவேற்றுவேன். எனக்காக தேர்தலில் உழைத்த காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியினர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்" என்றார்.