நெல்லித்தோப்பு இடைத்தேர்தலை சீர்குலைக்க அதிமுக திட்டம் தீட்டி வருகிறது: நாராயணசாமி- வீடியோ
Subscribe to Oneindia Tamil
புதுச்சேரி: புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதிக்கு இம்மாதம் 19ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில், திமுக - காங்கிரஸ் வேட்பாளராக அம்மாநில முதல்வர் நாராயணசாமி போட்டியிடுகிறார். இந்நிலையில், புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார் நாராயணசாமி. அப்போது அவர், 'நெல்லித்தோப்பு தொகுதி இடைதேர்தலின்போது சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க அதிமுக திட்டம் தீட்டி வருவதாக' குற்றம் சாட்டினார். மேலும், 'தேர்தலின்போது கலவரத்தில் ஈடுபடுகின்றவர்கள் மீது, காவல்துறை மற்றும் தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கை எடுக்க வெண்டும்' என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.












Click it and Unblock the Notifications