“கைல காசு ரெடி, ஆனா வாய்க்கு தோசை இல்லை”.. மத்திய அரசின் அதிரடியால் பசியால் திணறும் மக்கள்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: மத்திய அரசின் பழைய ரூ. 500 மற்றும் 1000 நோட்டுகள் இனி செல்லாது என்ற அறிவிப்பால் பெரும்பாலான மக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளது. பலர் கைகளில் ஆயிரக்கணக்கில் பணம் இருந்தும், அவற்றை செலவழிக்க இயலாமல் திண்டாடி வருகின்றனர். பெட்ரோல் பங்குகளில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் பெற்றுக் கொள்ளப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ள போதும், பல இடங்களில் சில்லறை இல்லை எனக் கூறி இந்த நோட்டுகளைப் பெற மறுக்கின்றனர். இது தவிர உணவகங்களிலும் இந்த நோட்டுகளை பெற மறுப்பதால், கை நிறைய கரன்சி இருந்தும் சாப்பிட வழியில்லாமல் அவதிப்படுவதாக பலர் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும், சிறு வியாபாரிகளும் மத்திய அரசின் இந்த அதிரடி அறிவிப்பால் பெரும் பாதிப்பைச் சந்தித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications