சோ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திய புதுச்சேரி செய்தியாளர்கள்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
புதுச்சேரி: தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளர்களில் ஒருவரும் நடிகரும் நாடக ஆசிரியருமான சோ ராமசாமி(82) நேற்று அதிகாலை மாரடைப்பால் காலமானார். எம்.ஆர்.சி நகரில் உள்ள இல்லத்தில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சியினர், திரையுலகினர் அஞ்சலி செலுத்திய பின்னர் மின்மயானத்தில் எரியூட்டப்பட்டது. இந்நிலையில், புதுச்சேரி பத்திரிகையாளர்கள் சார்பில் சோவிற்கு இரங்கல் தெரிவிக்கும் நிகழ்ச்சி அம்மாநில சட்டசபையில் உள்ள செய்தியாளர் அறையில் நடைபெற்றது. அதில், மறைந்த சோவின் படத்திற்கு செய்தியாளர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.












Click it and Unblock the Notifications