திருப்பதி அருகே துப்பாக்கிச் சூடு... செம்மரக்கடத்தலில் ஈடுபட்டதாக 4 தமிழக தொழிலாளர்கள் கைது- வீடியோ
Subscribe to Oneindia Tamil
திருப்பதி: திருப்பதி சேஷாச்சல வனப்பகுதியில் செம்மரக்கடத்தல் தடுப்புப்பிரிவு சிறப்பு அதிரடிப்படை எஸ்.ஐ. பாஸ்கர் தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது, அக்கன்ன தோனா வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டி தோலில் சுமந்தபடி வந்த 40 தொழிலாளர்களை, போலீசார் சரணடையும்படி தெரிவித்ததாகவும், ஆனால், அவர்கள் போலீசார் மீது கற்கள், கொம்புகள், கோடாரிகளை வீசி தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் தற்காப்புக்காக வானத்தை நோக்கி 2 முறை துப்பாக்கியால் சுட்டனர். இதனை அடுத்து, அங்கிருந்த கூலித் தொழிலாளர்கள் தப்பி ஓடிய நிலையில், தருமபுரி மற்றும் ஜவ்வாது மலையை சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
வீடியோ:












Click it and Unblock the Notifications