ரூ. 500, 1000 நோட்டுகளை டெபாசிட் செய்ய குவிந்த மக்கள்... ஏடிஎம்களில் தள்ளுமுள்ளு- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: மத்திய அரசின் பழைய ரூ. 500 மற்றும் 1000 நோட்டுகள் இனி செல்லாது என்ற அறிவிப்பால் நேற்றிரவு ஏடிஎம் மையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. சிலர் தங்களது வங்கிக் கணக்கில் இருந்து நூறு ரூபாய் நோட்டுகளாக எடுக்க முயற்சித்தனர். மேலும் சிலர் தங்களிடமிருந்த ரூ. 500 மற்றும் ரூ. 1000 நோட்டுகளை டெபாசிட் செய்ய முயற்சித்தனர். 12 மணிக்கு மேல் ஏடிஎம் வேலை செய்யாது என்ற காரணத்தால் ஒரே நேரத்தில் பலர் அங்கு குவிந்தனர். இதனால் மக்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தகவல் அறிந்து ஏடிஎம் மையங்களுக்கு விரைந்து வந்த போலீசார், மக்களை வரிசைப் படுத்தினர். இந்த காட்சிகளை தமிழகத்தின் பெரும்பாலான நகரங்களில் உள்ள ஏடிஎம் மையங்களில் காண முடிந்தது.












Click it and Unblock the Notifications