தனது தத்து கிராமத்திற்கு விசிட் செய்த கிரிக்கெட் கடவுள்... அன்பில் நெகிழ வைத்த மக்கள்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
நெல்லூர்: ராஜ்யசபா எம்.பியும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான சச்சின் டெண்டுல்கர் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், ஆந்திர மாநிலம், நீருநோடு பஞ்சாயத்திற்குட்பட்ட புட்டம்ராஜு கண்டிகா என்ற கிராமத்தை கடந்த 2014ம் ஆண்டு தத்தெடுத்தார். தனது எம்பி தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.2.79 கோடியில் அங்கு வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு சச்சின் அடிக்கல் நாட்டினார். இந்நிலையில், வளர்ச்சி பணிகளை தொடங்கி வைக்கவும், பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்காகவும் சச்சின் நேற்று தனது தத்து கிராமத்திற்கு வந்தார். அங்கு அவர் புதிதாக கட்டப்பட்டுள்ள ரூ.1.30 கோடியில் கட்டப்பட்ட சமுதாயக்கூடத்தை திறந்து வைத்தார்.












Click it and Unblock the Notifications