கட்டிடத்தைக் காலி செய்ய மறுப்பு... டாஸ்மாக் கடைக்கு பூட்டு போட்ட உரிமையாளர்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சேலம்: சேலம் களரம்பட்டி பகுதியில் தனியாருக்குச் சொந்தமான கட்டிடத்தில் டாஸ்மாக் கடை ஒன்று இயங்கி வருகிறது. இந்தக் கடையானது ஒப்பந்தக் காலத்தையும் மீறி செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் டாஸ்மாக் கடையை காலி செய்யச் சொல்லி, நேற்று அக்கட்டிடத்தின் உரிமையாளர் கடைக்கு பூட்டு போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், கட்டிட உரிமையாளரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பிரச்சினையால் அப்பகுதி மதுபிரியர்கள் மது கிடைக்காமல் சிரமம் அடைந்தனர். இதன் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.












Click it and Unblock the Notifications