‘ஹலோ போலீஸ்’... குற்றங்களைத் தடுக்க சிவகங்கை போலீசாரின் அதிரடி ஐடியா- வீடியோ
சிவகங்கை: சிவகங்கை: குற்றங்களை தடுக்கவும், சமூகவிரோதிகளை விரைந்து பிடிக்கவும் போலீசாருக்கு உதவியாக 'ஹலோ போலீஸ்' என்ற புதிய பிரிவு சிவகங்கையில் துவக்கப்பட்டுள்ளது. எஸ்.பி., (பொறுப்பு) தேஷ்முக்சேகர் சஞ்சய் இதனை துவக்கி வைத்தார். இதற்கென தனி செல்போன் நம்பர் 860 8600 100 அளிக்கப்பட்டுள்ளது. இதில், புகார்களை வீடியோ, போட்டோ, வாய்ஸ், எழுத்து மூலமாக அனுப்பலாம். தகவல் கிடைத்த 30 நிமிடங்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்துள்ளனர். ஈவ் டீசிங் புகார்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 'வாட்ஸ்ஆப்' எண் பள்ளிகள், கல்லுாரிகள், பேருந்து நிலையம், கோயில், மருத்துவமனைகள் போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்களில் விளம்பரப்படுத்தப்பட இருக்கிறது. இதற்காக மாவட்டத்தில் 38 ஸ்டேஷன்களிலும் சைரன் விளக்கு பொருத்திய 2 இருசக்கர வாகனங்கள் தயாராக இருக்கும் என்றும், ஒரு'ஷிப்டு' க்கு 2 போலீசார் வீதம் 24 மணி நேரமும் இப்பிரிவு இயங்கும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications