For Daily Alerts
Just In
ஆபரேஷன் சக்சஸ்... பேஷண்ட் டைய்ட்... விரலில் மை வைப்பது குறித்து ஸ்டாலின் கிண்டல்- வீடியோ
மதுரை: கறுப்பு பணத்தை பிறரிடம் கொடுத்து மாற்றி வருவதாக எழுந்த புகாரை அடுத்து பணத்தை மாற்ற வருபவர்களின் கைகளில் அழியாத மை வைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த மை வைக்கும் முறை உடனடியாக அமலுக்கு வரும் என்றும் பொருளாதார விவகாரத்துறை செயலர் சக்தி காந்த தாஸ் அறிவித்துள்ளார். இந்நிலையில், "வங்கியில் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை எடுக்க வருபவர்களின் கைகளில் மை வைப்பது ஓட்டு போட்ட மக்களை அவமானப்படுத்துவது போல உள்ளது" என திமுக பொருளாளர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், "இந்தத் திட்டம் குறித்து ஒரே வார்த்தையில் சொல்வதென்றால், 'ஆபரேஷன் சக்சஸ், ஆனால் பேஷண்ட் டைய்ட்' என நகைச்சுவையாக அவர் கூறினார்.
Comments
English summary
Strongly criticising the Central government’s decision to apply indelible ink marks on the fingers of people who exchange demonetised currency notes in banks, DMK treasurer M.K. Stalin on Tuesday such actions amounted to a government suspecting its citizens. He urged the Centre to immediately withdraw the decision.
Story first published: Wednesday, November 16, 2016, 15:04 [IST]