ரூ. 500, 1000 நோட்டுகள் விவகாரம்.. திருப்பூரில் அனைத்துக்கட்சிகளின் கடையடைப்பு போராட்டம்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
திருப்பூர்: மத்திய அரசின் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் மக்களைப் போலவே வணிகர்களும் பெரும் பாதிப்பைச் சந்தித்து வருகின்றனர். சில்லறைத் தட்டுப்பாட்டால் அவர்களது வணிகம் பெரும் சரிவைச் சந்தித்துள்ளது. இந்நிலையில், திருப்பூரில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஒருநாள் முழு அடைப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தன. இதற்கு ஆதரவு தெரிவித்து பெரும்பாலான வணிக நிறுவனங்கள் மற்றும் பனியன் தொழிற்சாலைகள் போராட்டத்தில் ஈடுபட்டன. பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை வரும் டிசம்பர் 31ம் தேதி வரை செல்லும் என அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது. இதற்கிடையே மர்மநபர்கள் சிலர் அரசு பேருந்தை தாக்கியதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கட்சித்தலைவர்கள் பத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.












Click it and Unblock the Notifications