கணவருடன் தகராறு... 4 மாதக் குழந்தையை கொன்று தாய் தற்கொலை- வீடியோ
Subscribe to Oneindia Tamil
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே கரப்பாளையத்தை சேர்ந்த ராமசாமி-சுதா தம்பதியினருக்கு 4 வயதில் ஒரு பெண் குழந்தையும், 4 மாத ஆண் குழந்தையும் உள்ளனர். கடந்த சில மாதங்களாக ராமசாமி-சுதா தம்பதியினரிடையே சண்டை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தகராறு முற்றியதால் மனமுடைந்த சுதா தன்னுடைய 4 மாத ஆண் குழந்தையை கொன்று விட்டு தானும் தற்கொலை செய்துகொண்டார். இச்சம்பவம் குறித்து சுதாவின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆர்.டி.ஓ. விசாரணையும் நடந்து வருகிறது. தனது தாத்தா-பாட்டியுடன் சாமி தரிசனம் செய்ய சென்றதால், 4 வயது பெண் குழந்தை உயிர் தப்பினார்.












Click it and Unblock the Notifications