நோ க்யூ... நோ மை... ஜன்னல் வழியாக கேஷியரிடம் பணம் வாங்கும் கருப்பு ஆடு... வைரலாகும் வீடியோ
Subscribe to Oneindia Tamil
மும்பை: மத்திய அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து மக்கள் தங்களிடம் உள்ள பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற வங்கிகளுக்கும், தபால் நிலையத்திற்கும் அலைந்து வருகின்றனர். பெரிய வரிசையில் நின்று, கையில் மை வைத்து என பல்வேறு சிரமங்களுக்குப் பின்னரே அவர்களால் தங்களது பணத்தை மாற்ற முடிகிறது. ஆனால், இவர்களில் இருந்து வேறுபட்டு, ஒரு நபர் வங்கியின் ஜன்னல் வழியாக திருட்டுத்தனமாக கேஷியரிடம் இருந்து பணத்தைப் பெறுகிறார். மும்பையில் உள்ள வங்கி ஒன்றில் இந்த சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி உள்ளது.












Click it and Unblock the Notifications