திருப்பூரில் குடிபோதையில் தகராறு : பனியன் தொழிலாளி குத்திக் கொலை- வீடியோ
Subscribe to Oneindia Tamil
திருப்பூர்: திருப்பூரில் குடிபோதையில் நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்துள்ளது. திருப்பூர் காலேஜ் ரோடு அருகே இந்த கொலை நிகழ்ந்துள்ளது. .கரூர் மாவட்டம், குளித்தலை சேர்ந்தவர், ராஜாமுகமது, 38. பனியன் தொழிலாளி. திருநெல்வேலியை சேர்ந்த சந்திரசூரியன். இருவரும் தங்கள் வீட்டு காம்பவுண்ட் முன் அமர்ந்து மது அருந்தியுள்ளனர். போதையில், இருவரும் சண்டையிட்டனர். இதில், சந்திரசூரியன், ராஜாமுகமதுவை கத்தியால், குத்தியதில் அவர், சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.வாய்த்தகராறு கொலையில் முடிந்தது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications