கள்ளக்குறிச்சி அருகே அரசு பஸ்-கார் மோதி சென்னையை சேர்ந்த 6 பேர் பலியானது எப்படி?

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: கள்ளக்குறிச்சி அருகே தியாகதுருகம் என்ற பகுதியில், அரசு பஸ் மற்றும் கார் மோதிய விபத்தில் சென்னையைச் சேர்ந்த 6 பேர் பலியானார்கள். விபத்து எப்படி நடைபெற்றது என்பது குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

Recommended Video

    கள்ளக்குறிச்சியில் அரசு பேருந்தும் காரும் நேருக்குநேர் மோதி கோர விபத்து.. 2 பெண்கள் உட்பட 6 பேர் பலி

    சென்னை தாம்பரம் பகுதியைச் சேர்ந்தவர் எபினேசர் இமான் (28). இவரது குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் காரில் ஊட்டிக்கு சுற்றுலா சென்றுள்ளனர். பின்னர், நேற்று, ஊட்டியிலிருந்து சென்னைக்கு புறப்பட்டனர்.

    நேற்று இரவு, இவர்களது கார், கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் புறவழிச்சாலையில் வந்தபோது, சென்னையில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பஸ் ஒன்று சேலம் நோக்கிச் சென்றது. பஸ்சை அழகுராஜன் (40), என்பவர் ஓட்டிக் கொண்டிருந்தார்.

    நேருக்கு நேர் மோதல்

    நேருக்கு நேர் மோதல்

    தியாகதுருகம் புறவழிச்சாலை பிரிதிவிமங்கலம் பஸ்நிறுத்தம் அருகே சுற்றுலா சென்று திரும்பியவர்கள் வந்த எஸ்யூவி வகை கார் மற்றும் எதிரே வந்த அரசு பஸ் இரண்டும், எதிர்பாராத விதமாக மோதிக்கொண்டன. இந்த கோர விபத்தில் பஸ்சின் முன்பக்க அடியில் காரின் போனட் பகுதி சிக்கிக்கொண்டதால் சில அடி தூரத்துக்கு அந்த காரை, பஸ் இழுத்து சென்று சாலையோர பள்ளத்தில் இறங்கி நின்றது.

    பஸ்சுக்கு அடியில் சிக்கிய போனட்

    பஸ்சுக்கு அடியில் சிக்கிய போனட்

    தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பஸ்சுக்கு அடியில் சிக்கிய காரை மீட்பு வாகனம் மூலம் மீட்டனர். காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த இமானுவேல், எபினேசர் பெஞ்சமின், சென்னையை சேர்ந்த மோனிக்கா, ரபேக்கால், ஜெசி, ஜோஸ்வா உட்பட்ட ஆகிய 6 பேரும் இந்த விபத்தில், உடல் நசுங்கி உயிரிழந்துள்ளனர். இவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களாகும்.

     பஸ் பயணிகள்

    பஸ் பயணிகள்

    இவர்களின் உடல்களை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பஸ்சில் வந்த 5 பயணிகள் காயம் அடைந்துள்ளனர். இந்த பஸ்சில் சுமார் 36 பேர் பயணம் செய்துள்ளனர் என்று கூறப்படுகிறது.

    எஸ்யூவி கார்

    எஸ்யூவி கார்

    விபத்தில் சிக்கிய வாகனம் மகேந்திரா நிறுவனத்தின் எக்ஸ்யூவி என்ற எஸ்யூவி வகையைச் சேர்ந்தது. இரவு நேரத்தில் இந்த விபத்து நடந்துள்ளதால் டிரைவர்களின் தூக்க கலக்கம்தான் இதன் பின்னணியில் உள்ளதா, எந்த டிரைவர் மீது தவறு என்ற கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+