யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம்.. ஆட்சிக்கு வருவது அதிமுகதான்.. முதல்வர் பழனிசாமி சவால்!
யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம், ஆனால் ஆட்சிக்கு வருவது அதிமுக மட்டும்தான் என்று தமிழக முதல்வர் பழனிசாமி விக்கிரவாண்டியில் பேசி இருக்கிறார்.
விழுப்புரம்: யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம், ஆனால் ஆட்சிக்கு வருவது அதிமுக மட்டும்தான் என்று தமிழக முதல்வர் பழனிசாமி விக்கிரவாண்டியில் பேசி இருக்கிறார்.
தமிழகத்தில் விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி இடைத்தேர்தல் முடிவுகளும் கடந்த மாதம் வெளியானது. இதில் இரண்டு தொகுதியிலும் அதிமுக கட்சியே வெற்றிபெற்றது. நாங்குநேரியில் அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் வெற்றிபெற்றார்.
விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் வெற்றிபெற்றார். இந்த நிலையில் விக்கிரவாண்டி தொகுதியில் நன்றி அறிவிக்கும் கூட்டத்தில் இன்று முதல்வர் மக்கள் முன்னிலையில் பேசினார்.

பேசினார்
முதல்வர் பழனிசாமி தனது பேச்சில், நாடாளுமன்ற தேர்தலில் பொய் வாக்குறுதிகளை அளித்து ஸ்டாலின் வெற்றி பெற்றார். யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம். ஆனால் ஆட்சிக்கு வருவது அதிமுக மட்டும்தான். அதிமுக ஆட்சிதான் தொடர போகிறது.

அரசியல் எப்படி
அரசியலை தொழில் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் இது எளிமையான விஷயம் கிடையாது. அரசியலில் கால் வைத்து நிற்பது கடினம். அதிமுகவின் கூட்டணி மிகப்பெரியது, எங்கள் கூட்டணியை யாராலும் நெருங்க முடியாது.

சட்டசபை இடைத்தேர்தல் முடிவு
சட்டசபை இடைத்தேர்தலில் திமுகவிற்கு மக்கள் அல்வா கொடுத்துவிட்டார்கள். காங்கிரஸ் கோட்டையிலும், திமுக கோட்டையிலும் அதிமுக வென்றுள்ளது. எங்கள் கட்சியில் வெற்றிடம் இல்லை, தமிழகத்தில் வெற்றிடம் இல்லை என்று இதன் மூலம் நிரூபணம் ஆகியுள்ளது.

சான்றிதழ்
எங்கள் ஆட்சிக்கு சான்றிதழ் கொடுக்கும் வகையில் இந்த தேர்தல் முடிவுகள் வந்துள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பின் பல சோதனைகளை சந்தித்தோம். எங்கள் ஆட்சிக்கு நிறைய நெருக்கடி வந்தது. திமுகவின் திட்டங்களை எல்லாம் மக்கள் தோல்வி அடைய செய்துவிட்டார்கள்.

ஆட்சி கவிழும்
இப்போது ஆட்சி கவிழும், அப்போது ஆட்சி கவிழும் என்று ஸ்டாலின் கனவு கண்டு கொண்டு இருக்கிறார்.ஆனால் ஸ்டாலினின் கனவை மக்கள் தவிடு பொடியாக்கிவிட்டார்கள். உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுக கூட்டணிதான் வெற்றிபெறும் அதேபோல் தமிழக சட்டசபை தேர்தலிலும் 2021ல் அதிமுக கூட்டணிதான் வெற்றிபெறும் என்று முதல்வர் பழனிசாமி பேசி இருக்கிறார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications