மாமா வீட்டுக்கு விருந்துக்கு போன மாணவன்.. கடைசியில் இப்படியா பார்க்கணும்.. விழுப்புரத்தில் சோகம்
விழுப்புரம்: கடலூர் மாவட்டத்தை சேர்ந்த பள்ளி மாணவன் கோவில் திருவிழாவை பார்ப்பதற்காக விழுப்புரத்தில் உள்ள தன் மாமா வீட்டுக்கு விருந்துக்கு சென்றார். அங்கு திருவிழா பார்த்துக்கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி பள்ளி மாணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவனது மாமா படுகாயமடைந்தார். கோவில் திருவிழாவின் போது நிகழ்ந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன். இவரது மகன் நித்திஷ் குமார் (வயது 14). மாணவன் சித்திரைச் சாவடி பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வந்தான். தற்போது பள்ளியில் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் மாணவன் வீட்டருகே உள்ள தன் நண்பர்களுடன் விளையாடி நேரம் போக்கி வந்தான்.

இந்த நிலையில் விழுப்புரத்தில் உள்ள அவனது மாமா அய்யனார், தன் ஊரில் கோவில் திருவிழா நடப்பதாகவும், அதற்கு வருமாறும் நித்திஷ்குமாரின் குடும்பத்தினரை அழைத்துள்ளார். பள்ளிகள் விடுமுறை விடப்பட்டிருந்ததால் மாணவன் நித்திஷ் குமார் விழுப்புரம் மாவட்டம் பெரும்பாக்கத்தில் உள்ள தன் மாமா அய்யனார் வீட்டுக்கு சென்றார்.
நேற்று பெரும்பாக்கம் அங்காளம்மன் கோவிலில் திருவிழா நடந்தது. நேற்று முன் தினம் 8 ஆம் திருவிழாவின் நிகழ்ச்சியாக, அம்மன் வீதி உலா நடந்தது. அப்போது அம்மனுக்கு மேல் பகுதியில் இரும்பினால் ஆன குடை இருந்தது. அம்மன் வீதி உலா வாகனத்தில் மாமா பையன் கிருஷ்ணராஜ் (14) அமர்ந்திருந்தான். அப்போது நித்திஷ்குமாரையும் தன்னுடன் அமருமாறு அழைத்திருக்கிறார்.
இருவரும் அம்மன் வாகனத்தில் இருந்தபடி வந்தனர். நள்ளிரவு நேரத்தில் பெரும்பாக்கம் மந்தக்கரை தெருவில் அம்மன் வீதிஉலா வந்தபோது அப்பகுதியில் சென்ற மின் கம்பி இரும்பு குடையின் மேல் பகுதியில் உரசியது. இதில் மின்சாரம் பாய்ந்ததில் கீழே அமர்ந்திருந்த பள்ளி மாணவர்கள் நித்திஷ்குமார், கிருஷ்ணகுமார் மீதும் தாக்கியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.
நித்திஷ்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கிருஷ்ணகுமார் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். அங்கு சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. திருவிழாவில் அம்மன் வீதி உலா வாகனத்தில் மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது. இது தொடர்பாக போலீசாரும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு












Click it and Unblock the Notifications