Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திண்டிவனம் டூ கடலூர் புதிய ரயில் பாதை.. புதுச்சேரி, திருவண்ணாமலைக்கு செம்ம.. மத்திய அரசு விளக்கம்

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: திண்டிவனத்திலிருந்து கடலூர் துறைமுகம் சந்திப்பு வரை, புதுச்சேரி வழியாக சுமார் 77 கி.மீ. நீளத்திற்கு புதிய ரயில் பாதை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டள்ளது. இந்த திட்டம், சென்னை மற்றும் புதுச்சேரியை இணைத்து, கடலூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு ரயில் இணைப்பை மேம்படுத்தும் என்று கூறப்படுவதால் இதன் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தள்ளது. இந்த புதிய ரயில் வழித்தடம் அமைப்பது குறித்த ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

கடலூர், புதுச்சேரி மாவட்ட மக்களுக்கு திண்டிவனம் வழியாக புதிய ரயில் பாதை அமைத்து, அப்படியே திண்டிவனத்தில் இருந்து செஞ்சி வரியாக எளிதாக திருவண்ணாலை வரை ரயில் பாதை அமைத்தால், வேலூர் காட்பாடி வழியாக இரு வழித்தடங்களிலும் மக்கள் எளிதாக பயணிக்க முடியும். பெங்களூருக்கு புதுச்சேரியில் இருந்து ரயில்களை இயக்க முடியும்.

Central explains the planned new Tindivanam-Cuddalore railway line via Puducherry

திருவண்ணாமலை

வட மாவட்டங்கள் முழுமையாக இந்ததிட்டத்தால் பயன்பெறும். கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர் மாவட்ட மக்களுக்கு இந்த திடடம் பயனுள்ளதாக இருக்கும். இந்த திட்டம் செயல்பாட்டிற்கு வந்தால், திருவண்ணாமலைக்கு செல்லும் பக்தர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். சென்னையில் இருந்தும், தாம்பரத்தில் இருந்தும் திருவண்ணாமலைக்கு நேரடி தொடர்பு ஏற்படும். காஞ்சிபுரம் எப்படி நேரடி தொடர்பில் சென்னையுடன் இருக்கிறதோ அதுபோல் திருவண்ணாமலையும் மாறும். பொருளாதார மாற்றமும் வடமாவட்டங்களில் அதிகமாகும்.

மத்திய அமைச்சர் விளக்கம்

திண்டிவனத்திலிருந்து கடலூர் துறைமுகம் சந்திப்பு வரை, புதுச்சேரி வழியாக சுமார் 77 கி.மீ. நீளத்திற்கு புதிய ரயில் பாதை அமைப்பது து தொடர்பாக, லோக்சபா கேள்வி நேரத்தின்போது எழுப்பிய கேள்விக்கு மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதிலளித்துப் பேசினார்.

திண்டிவனம் - கடலூர் புதிய ரயில் பாதை

அவர் பேசுகையில், "திண்டிவனம் - கடலூர் இடையே புதுச்சேரி வழியாக (77 கிமீ) புதிய ரயில் வழித்தடம் அமைப்பதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறைவான போக்குவரத்து மதிப்பீடுகள் காரணமாக இத்திட்டம் இன்னமும் செயலாக்கத்திற்கு கொண்டுவரப்படாமல் உள்ளது. எனினும், அப்பகுதி மக்களின் கோரிக்கைகள் மற்றும் ரயில் போக்குவரத்துக்கான இணைப்பை மேம்படுத்துதல் ஆகிய அம்சங்களைக் கருத்தில் கொண்டு திண்டிவனம் - சேதாரப்பேட்டை (புதிய புதுச்சேரி) இடையேயான புதிய ரயில் வழித்தடம் அமைப்பதற்கான விரிவான செயல்திட்ட அறிக்கைகளை தயார் செய்வதற்கான ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறோம்.

விரிவான திட்ட அறிக்கை

இந்த விரிவான செயல்திட்ட அறிக்கை இறுதி செய்யப்பட்டவுடன், மாநில அரசுகள் மற்றும் நிதியமைச்சகம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் ஆலோசனை நடத்தப்பட்ட பிறகு இத்திட்டம் செயல்படுவதற்கான அனுமதி வழங்கப்படும்" என்று கூறினார்.இந்த திட்டம் ஆய்வுக்கு பின்னர் அனுமதிக்கப்பட்டால் நிதி ஒதுக்கீட்டை பொறுத்தும், நிலம் கையகப்படுத்துதலை பொறுத்தும் பயன்பாட்டிற்கு வரும். நீண்ட காலம் ஆகும் என்றாலும், அரசு அனுமதி தந்தால் குறிப்பிட்ட ஆண்டுகளில் திட்டம் பயன்பாட்டிற்கு வந்துவிடும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+