சட்டை கிழிந்தது.. மாறி மாறி அடித்து கொண்ட பாமக, தேமுதிக தொண்டர்கள்.. விக்கிரவாண்டியில் பரபரப்பு
தேமுதிக - பாமக நிர்வாகிகள் மோதிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது விழுப்புரம்: விக்கிரவாண்டி தொகுதியில் தேமுதிக, பாமக நிர்வாகிகள் ஒருத்தருக்கொருத்தர் மாறி மாறி அடித்து கொண்டதால், பரபரப்பு ஏற்பட்டுள்ள
Recommended Video
விழுப்புரம்: விக்கிரவாண்டி தொகுதியில் தேமுதிக, பாமக நிர்வாகிகள் ஒருத்தருக்கொருத்தர் மாறி மாறி அடித்து கொண்டதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
விஜயகாந்த் கட்சி ஆரம்பித்ததில் இருந்தே பாமக தரப்பில் ஒரு எரிச்சல் வெளிப்பாடு இருந்து கொண்டே இருந்தது. இதற்கு காரணம், வட மாவட்டங்களில் விஜயகாந்த்துக்கும் ஓரளவு செல்வாக்கு இருந்ததுதான்.. இப்போதும் அது இருப்பதுதான்!
அதிமுகவுடன் கூட்டணி வைக்கும்போதே ஏகப்பட்ட ஈகோ தேமுதிக தரப்பில் வெளிப்பட்டது.. இப்போதுகூட இவர்கள் ஒரே கூட்டணியில் இருந்தாலும், புகைச்சல் ஓவராக இருந்து கொண்டே இருக்கிறது. விக்கிரவாண்டியில் பாமகவுக்கு ஒரு வலுவான செல்வாக்கு இருக்கிறது என்றால், தேமுதிகவுக்கும் ஓரளவு உள்ளது உண்மையே.

கூட்டணி தர்மம்
அதற்காகத்தான் விஜயகாந்த்தை விட்டுக்கொடுக்காமல், அமைச்சர்கள் வீடு தேடிச் சென்று சென்று ஆதரவு தரும்படி கேட்டு கொண்டனர். அதன்படியே பிரேமலதாவும், கடைசி நாளன்று விஜயகாந்தும் வந்து பிரச்சாரம் செய்துவிட்டு போனார்கள். ஒருவருக்கொருவர் ஆகாது என்றாலும், கூட்டணி தர்மத்தை இரு கட்சி தலைவர்களுமே காப்பாற்றி அதன்படி நடந்து கொண்டனர். ஆனால், தொண்டர்களுக்கு இது புரியவில்லை போலும்!

மோதல்
இன்று பலமான பாதுகாப்புடன் இடைத்தேர்தல் நடந்த நிலையில், விக்கிரவாண்டியில் பாமக, தேமுதிக தரப்பினர் பலமாக மோதிக் கொண்டனர். கல்யாணம் பூண்டி என்ற கிராமத்தில் தேமுதிக, பாமக நிர்வாகிகள் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டுள்ளனர்.

சமாதானம்
விஷயம் இதுதான்.. தேமுதிகவின் சேகர் மற்றும் பாமகவின் மணிகண்டன் இருவரிடையே பணம் பங்கிட்டுக்கொள்வதில் இந்த தகராறு ஏற்பட்டிருக்கிறது. இரு தரப்பினரும் கைகலப்பு வரை சென்றுவிட்டனர்.. இதனால் தகவல் போலீசுக்கு தெரிவிக்கப்பட்டு அவர்களும் விரைந்து வந்தனர். இரு தரப்பையும் போலீஸார் தலையிட்டு விலக்கி விட்டனர்.

பரபரப்பு
நடக்கும் தேர்தல் அதிமுக - திமுக இடையேதான் என்று சொல்லப்பட்டு வரும் நிலையில், அதிமுக கூட்டணியில் உள்ள இரு கட்சியினருமே மோதிக் கொண்டுள்ளது பெரிய சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. அத்துடன் அந்த பகுதியில் பரபரப்பும் நிலவுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications