பொன்முடிக்கு ஷாக் கொடுத்த சிவி சண்முகம்.. திடீரென மயிலம் தொகுதிக்கு செல்வது ஏன்? திமுகவின் ஆட்டம்!
விழுப்புரம்: அதிமுக மாநிலங்களவை எம்பி சிவி சண்முகம், வரும் சட்டசபைத் தேர்தலில் மயிலம் தொகுதியில் போட்டியிட முடிவு செய்திருக்கிறார். அமைச்சர் பொன்முடியை அந்த தொகுதியில் இருந்து ஓடவிட்ட சிவி சண்முகம், ஒரேயொரு தேர்தலில் அடைந்த தோல்வியால் தொகுதி மாறுவதற்கான காரணம் என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது. அதுதொடர்பாக பார்க்கலாம்.
1989, 1996, 2001, 2006 என்று விழுப்புரம் தொகுதியில் வெற்றிபெற்று திமுகவில் அசைக்க முடியாத சக்தியாக மாறியவர் பொன்முடி. இந்த வெற்றியே திமுகவில் பொன்முடி உச்சத்திற்கு செல்லவும், விழுப்புரம் மாவட்டம் அவரது கட்டுப்பாட்டுக்குள் செல்லவும் காரணமாக அமைந்தது. இப்படியான சூழலில் 2011 சட்டசபைத் தேர்தலில் அதிமுக தரப்பில் சிவி சண்முகம் விழுப்புரம் தொகுதியில் களமிறங்கினார்.

இந்த தேர்தலில் சுமார் 12 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பொன்முடி தோல்வி அடைய, சிவி சண்முகம் திமுக தலைமைக்கு ஷாக் கொடுத்தார். இதன்பின் 2016 சட்டசபைத் தேர்தலில் சிவி சண்முகம் மீண்டும் விழுப்புரம் தொகுதியில் போட்டியிட, பொன்முடி திருக்கோவிலூர் தொகுதிக்கு சென்றார். இதனால் விழுப்புரம் தொகுதியில் சிவி சண்முகத்தை வீழ்த்த முடியாமல் திமுக திணறியது.
இந்த நிலையில் அதிமுக தரப்பில் ராஜ்ய சபா எம்பியாக இருந்தவர் லட்சுமணன். சசிகலா ஆதரவுடன் அதிமுகவில் அடுத்தடுத்து பொறுப்புகளுக்கு சென்ற அவர், ஜெயலலிதா மறைவுக்கு பின் ஓபிஎஸ்க்கு ஆதரவாக இருந்தார். இதன்பின் ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி பழனிசாமி இணைந்த பின், லட்சுமணனின் பதவிகள் அடுத்தடுத்து சிவி சண்முகம் வசம் சென்றது.
இதனை புரிந்து கொண்ட லட்சுமணன், உடனடியாக திமுக பக்கம் தாவினார். உடனடியாக அவருக்கு விழுப்புரம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தது. இதனை சரியான வாய்ப்பாக கருதிய லட்சுமணன், விழுப்புரம் தொகுதியில் சுற்றி சுழன்று பணியாற்றினார். இதன் விளைவாக பொன்முடியால் வீழ்த்த முடியாத சிவி சண்முகத்தை, லட்சுமணன் வீழ்த்தி காட்டினார்.
இதனால் மீண்டும் விழுப்புரம் தொகுதி திமுக வசமானது. அதுமட்டுமல்லாமல் லட்சுமணனின் பணியால் உற்சாகம் அடைந்த திமுக தலைமை, அவருக்கு விழுப்புரம் மத்திய மாவட்டச் செயலாளர் பொறுப்பை வழங்கியது. இதனை பயன்படுத்தி லட்சுமணன் விழுப்புரம் தொகுஹியில் அதிமுகவில் இருந்த நிர்வாகிகள் பலரையும் தன்பக்கம் இழுத்துக் கொண்டார்.
ராஜ்ய சபாவிற்கு சிவி சண்முகம் சென்றதால், விழுப்புரம் தொகுதியில் சிவி சண்முகம் செல்வாக்கு குறைய தொடங்கியது. இப்படியான சூழலில் தனது சொந்த ஊரான அவ்வையார்குப்பம் இருக்கும் மயிலம் தொகுதியில் போட்டியிட சிவி சண்முகம் விருப்ப மனு கொடுத்துள்ளார். தனது அண்ணன் மூலமாக இந்த மனுவை கொடுத்திருக்கிறார்.
இதனால் சிவி சண்முகத்திற்கு இப்படியொரு நிலையா என்ற அதிமுகவினர் பேசத் தொடங்கியுள்ளனர். கடந்த முறை மயிலம் தொகுதி பாமக கூட்டணிக்கு ஒதுக்கப்பட்டது. இதனால் இம்முறை சிவி சண்முகம் போட்டியிடுவார் என்று தெரிகிறது. இதனால் அன்புமணி ஆதரவு பாமக எம்எல்ஏ-வான சிவகுமார் விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட தயாராகி வருகிறார்.
-
0.43% பிரேமலதாவுக்கு 10+1..3% கமலுக்கு 0! இன்னொரு மதிமுக மநீம? நீங்க சினிமாவுக்கே போயிருங்க ஆண்டவரே! -
அதிமுக, பாஜக நேரடி போட்டியில்லை.. பெரம்பூரில் தவெக விஜய்க்கு சாதகம்? களமிறக்கிவிடப்பட்ட பாமக! -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
கலைஞரின் மகள் கனிமொழி நெல்லையில் போட்டியா? அடம் பிடிக்கும் ஆதரவாளர்கள்! தலைமை போடும் வேறு கணக்கு! -
நம்பர் 1 முதல்வர் யார்? டாப் 5 லிஸ்ட்டில் யார் யார்? 1952 ராஜாஜி முதல் 2021 ஸ்டாலின் வரை! -
2026 தேர்தல் யார் ஜெயிப்பார்கள்? ‘நீயா நானா’வில் ஜோதிடர்கள் உடைத்த ரகசியம்! பெண்கள் ஓட்டு, மறு எலக்சன் இருக்காமே! -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. சாத்தூர், ராஜபாளையம் தொகுதியில் ராஜேந்திர பாலாஜி செய்த சம்பவம்! -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
"தாமரை சின்னத்தில் தமாகா 1 சீட் கூட ஜெயிக்காது”.. ஜி.கே.வாசன் முடிவுக்கு எதிராக கொதித்த நிர்வாகிகள்! -
ஷாக்கில் சரவணன்! எடப்பாடிக்காக விழுந்து விழுந்து வேலை பார்ப்பாரே அவரா? பாஜக விஐபிகள் மெகா ஸ்கெட்ச்












Click it and Unblock the Notifications