Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காலமானார் திமுக எம்எல்ஏ புகழேந்தி.. விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ புகழேந்தி உடல்நலக்குறைவால் இன்று காலமான நிலையில் அங்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தில் வரும் 19 ம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில் விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது நடக்கும்? என்பது பற்றி இங்கு பார்ப்போம்.

கடந்த 2021ம் ஆண்டில் நடந்த சட்டசபை தேர்தலில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் புகழேந்தி. இவர் விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளராகவும் செயல்பட்டார்.

Do you know when the by-election will be held for Vikravandi constituency due to DMK MLA Pugazhenthi

புகழேந்தி திமுகவின் மூத்த தலைவரும் அமைச்சருமான பொன்முடிக்கு மிகவும் நெருக்கமானவார். அதோடு அரசியலுக்குள் நுழைந்ததுமே அவர் எம்எல்ஏ ஆகிவிடவில்லை. திமுகவில் படிப்படியாக வளர்ந்து எம்எல்ஏ பதவியை எட்டிப்பிடித்தார்.

விழுப்புரம் அருகே அத்தியூர் திருவாதி கிராமத்தில் பிறந்த புகழேந்தி திமுகவின் கிளை செயலாளர், கோலியனூர் ஒன்றிய செயலாளர், விழுப்புரம் தெற்கு மாவட்ட பொருளாளர், மாவட்ட அவைத் தலைவர், விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளராக பதவி வகித்தவர். மேலும் ஊராட்சி மன்ற தலைவராகவும், கண்டமானடி தொடக்க கூட்டுறவு வங்கி தலைவராகவும், கோலியனூர் ஒன்றியக் குழு தலைவராகவும் இருந்தார்.

கடந்த 2019 விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுகவில் போட்டியிட்டு தோல்வியடைந்த புகழேந்தி கடந்த 2021 சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றார். இந்நிலையில் தான் கடந்த சில நாட்களாக அவர் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டார். அதன்பிறகு டிஸ்சார்ஜ் ஆன புகழேந்தி விழுப்புரம் விக்கிரவாண்டியில் நேற்று நடந்த முதல்வர் ஸ்டாலினின் திமுக பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். இந்த கூட்டத்தில் தான் அவர் மயங்கி விழுந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் இன்று காலையில் உயிர் பிரிந்தது.

இந்நிலையில் தான் புகழேந்தி எம்எல்ஏவின் மறைவால் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. பொதுவாக ஒரு தொகுதியின் எம்எல்ஏ மரணமடைந்தால் அல்லது பதவியை ராஜினாமா செய்தால் அடுத்த 6 மாதத்தில் இடைத்தேர்தல் நடத்தப்படும். அந்த வகையில் அடுத்த 6 மாதத்துக்குள் விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

அதன்படி பார்த்தால் செப்டம்பர் மாதத்துக்குள் ஜம்மு காஷ்மீருக்கு சட்டசபை தேர்தல் நடத்தப்பட வாய்ப்புள்ளது. அப்போது ஜம்மு காஷ்மீருடன் சேர்த்து விக்கிரவாண்டி தொகுதிக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்படலாம். ஒருவேளை ஜம்மு காஷ்மீர் தேர்தல் தேதி தள்ளிப்போனால் அக்டோபர் மாதத்தில் ஹரியானா, மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த சமயத்தில் விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதியில் இது 2வது இடைத்தேர்தலாகும். ஏனென்றால் கடந்த 2016 சட்டசபை தேர்தலில் திமுகவின் ராதாமணி வெற்றி பெற்று எம்எல்ஏவாக இருந்தார். அவர் கடந்த 2019ல் காலமானார். அப்போது முதல் முறையாக அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தது. இதில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ் செல்வனுடன் தற்போது காலமான புகழேந்தி தோற்றார். அதன்பிறகு 2021 சட்டசபை தேர்தலில் அதிமுக வேட்பாளரான சிட்டிங் எம்எல்ஏ முத்தமிழ் செல்வனை வீழ்த்தி புகழேந்தி வெற்றி பெற்றிருந்த நிலையில் இன்று காலமாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+