2வது குழந்தை அப்படியே அப்பனை உருச்சிவச்சிருக்குனு சொன்னதால் தாக்கிய செஞ்சி பெண்.. கள்ளக்காதலன் பகீர்
விழுப்புரம்: குழந்தைகளை பெற்றதால் அழகு போய்விட்டதாகவும் இளைய மகன் கணவனை போல் இருப்பதாக தான் சொன்னதால்தான் துளசி தனது குழந்தையை கடுமையாக தாக்கி அதை வீடியோவாக எடுத்து அனுப்பினார் என செஞ்சியில் குழந்தையை தாக்கிய பெண் விவகாரத்தில் அவரது கள்ளக்காதலன் வாக்குமூலம் அளித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் மணலப்பாடி மதுர கோட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் வடிவழகன். இவர் ஆந்திர மாநிலம் ராம்பள்ளியைச் சேர்ந்த துளசி (23) என்பவரை 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கோகுல் (4), பிரதீப் (2) ஆகிய இரு மகன்கள் உள்ளனர்.
இவர்கள் குடும்பத்துடன் சென்னையில் தங்கியிருந்த நிலையில் ஊரடங்கால் வேலை இல்லாததால் மோட்டூருக்கே திரும்பினர். இந்த நிலையில் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரை சித்தூரில் உள்ள தாய் வீட்டுக்கு வடிவழகன் அனுப்பிவிட்டார்..

இளைய மகன்
இந்த நிலையில் அவரது செல்போனை ஆராய்ந்த போது அதில் இளைய மகன் பிரதீப்பை துளசி கடுமையாக அடித்து துன்புறுத்தியதை அறிந்து வடிவழகன் அதிர்ந்தார். இது போல் அந்த குழந்தையை மட்டும் தாக்கும் நிறைய வீடியோக்கள் இருந்தன. பின்னர் போலீஸில் வடிவழகன் புகார் கொடுத்தார். இதையடுத்து ஆந்திராவில் இருந்த துளசியை போலீஸார் கைது செய்தனர்.

சென்னையை சேர்ந்தவருடன்
இதையடுத்து அவர் மனநலம் பாதிக்கப்பட்டதாக துளசி தரப்பில் கூறப்பட்டது. ஆனால் அவருக்கும் சென்னையைச் சேர்ந்த மணிகண்டனுக்கும் (31) இடையே தகாத உறவு ஏற்பட்டதை வடிவழகன் போலீஸாரிடம் தெரிவித்தார். இதையடுத்து துளசியை விசாரித்த போது அவர் தனக்கு இருக்கும் கள்ளக்காதலை ஒப்புக் கொண்டார்.

கள்ளக்காதலுக்கு இடையூறு
மேலும் விசாரணையில் கள்ளக்காதலுக்கு தனது கணவர் இடையூறாக இருப்பதால் குழந்தை மீது கோபம் கொண்டு அடித்து தனது கோபத்தை தீர்த்து கொண்டேன் என தெரிவித்தார். மேலும் இவர் வீடியோக்களை எடுத்து கள்ளக்காதலன் மணிகண்டனுக்கும் அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரிவித்திருந்தார். மேலும் குழந்தையை தாக்கினால் கணவரை பிரிந்து விடலாம் என்பதால் குழந்தையை தாக்கியதாகவும் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

கள்ளக்காதலனை பிடிக்க தனிப்படை
இதையடுத்து கள்ளக்காதலனை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தேடி வந்தனர். இந்த நிலையில் மணிகண்டன் அறந்தாங்கியில் உள்ள தனது சித்தியின் மகன் வீட்டில் பதுங்கியிருந்ததாக தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படை போலீஸார் விரைந்து சென்று மணிகண்டனை பிடித்தனர். பின்னர் அவரை கைது செய்து விழுப்புரம் அழைத்து வந்தனர்.

செல்போனில் பேச்சு
விசாரணையில் அவர் பகீர் தகவல்களை அளித்துள்ளார். சென்னையில் வசிக்கும் போதுதான் துளசியுடன் தகாத தொடர்பு ஏற்பட்டது. பின்னர் கொரோனாவால் அவர்கள் சொந்த ஊர் சென்ற போதும் அந்த தொடர்பு நீடித்தது. அடிக்கடி இருவரும் செல்போனில் பேசி கொண்டிருந்துள்ளனர்.

அப்பனை போல் இருக்கு
அப்போது குழந்தைகளை பெற்றதால் உன் அழகு போய்விட்டதாக துளசியிடம் கூறிய மணிகண்டன், இளைய மகன் பிரதீப், வடிவழகனை போல் இருப்பதாகவும் கூறியுள்ளார். இதனால் கள்ளக்காதல் கண்களை மறைத்ததால் அந்த குழந்தையை கண்மூடித்தனமாக அடித்து அதை வீடியோவாக எடுத்து காதலனுக்கு அனுப்பி வைத்துள்ளார் துளசி. கடந்த 50 நாட்களுக்கு முன் கணவன்- மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டு துளசியை ஆந்திராவுக்கு அனுப்பிவிட்டார் வடிவழகன். அப்போதுதான் துளசியின் அட்டூழியங்கள் அவரது செல்போன் மூலம் வடிவழகனுக்கு தெரியவந்தது.

அதிர்ச்சி
மணிகண்டனின் சொந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டம் மச்சவாடி கிராமம் ஆகும். இவரது பெயரை பிரேம்குமார் என கூறியே துளசியிடம் பழகி வந்தது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட மணிகண்டனை 15 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டதை அடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார். கள்ளக்காதலுக்காக குழந்தையை கொடூரமாக தாக்கி அதை வீடியோவாக எடுத்து கள்ளக்காதலனுக்கு அனுப்பிய இந்த நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா?












Click it and Unblock the Notifications