நீங்க அடிமை கட்சி.. நீங்க குடும்ப கட்சி.. ஸ்டாலின் - முதல்வர் இடையே வார்த்தை போர்.. தேர்தல் பரபர!
தமிழகத்தில் நடக்க உள்ள இரண்டு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு பிரச்சாரம் தீவிரம் அடைந்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் நடக்க உள்ள இரண்டு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு பிரச்சாரம் தீவிரம் அடைந்துள்ளது. தமிழக முதல்வர் பழனிசாமி மற்றும் எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் இடையே கடுமையான வாக்குவாதம் இதனால் நடந்து வருகிறது.
வேலூர் லோக்சபா தேர்தலுக்கு பிறகு தற்போது மீண்டும் தமிழகத்தில் இரண்டு சட்டசபை தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கிறது. அதன்படி தமிழகத்தில் நாங்குநேரி விக்கிரவாண்டி தொகுதிகளுக்கான இடைத்தோ்தல் வரும் அக்டோபர் மாதம் 21ம் தேதி நடைபெறுகிறது.
இதற்கான திமுக, அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டார்கள். இவர்கள் சார்பாக அரசியல் கட்சித் தலைவர்கள் இரண்டு தொகுதிகளிலும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

விக்கிரவாண்டி
இந்த நிலையில் விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வனை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். அதில் அவர் திமுக மீது சரமாரியான குற்றச்சாட்டுகளை வைத்தார். அவர், திமுக ஒரு குடும்பம் மட்டும் நடத்தும் கட்சி. அங்கு தொண்டர்களுக்கு மரியாதை இல்லை.

திமுக எப்படி
திமுகவில் அப்பா, மகன், பேரன் என்று வரிசையாக பதவி வழங்கி அழகு பார்க்கிக்கிறார்கள். வரலாற்றிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட அரசு, திமுக அரசு தான். ஊழலை பற்றி கனிமொழி பேசியுள்ளார். யார் யார் பேசவேண்டும் என்கிற விவஸ்தையே இல்லாமல் போய்விட்டது.

முதல்வர் கனவு
முதல்வர் ஆகும் கனவு நினைவாக, என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் நினைக்கிறார். ஆனால் அவரை மக்கள் நம்ப மாட்டார்கள். திமுக ஓர் கார்ப்பரேட் கம்பெனியை போல் செயல்பட்டு வருகிறது.திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அவர் வீட்டை பற்றி சிந்திக்க மட்டுமே நேரம் உள்ளது, என்று குறிப்பிட்டார்.

பதிலடி
இந்த நிலையில் இதற்கு பதில் அளிக்கும் வகையில் விக்கிரவாண்டி தொகுதி திமுக வேட்பாளர் புகழேந்தியை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார். முதல்வரின் குற்றச்சாட்டிற்கு அவர் பதில் அளித்தார். அதில், அதிமுக அடிமைகளின் கட்சியாக மாறிவிட்டது. பாஜக சொல்வதை தமிழகத்தில் நிறைவேற்றும் கட்சிதான் அதிமுக.

ஸ்டாலின் பதில்
அவர்கள் இப்போது பாஜகவின் பேச்சை கேட்கும் கிளிப்பிள்ளை. தமிழக அரசுக்கு மக்கள் நலனில் அக்கறை இல்லை.மத்திய பாஜக அரசுக்கு அடிபணியும் அரசாக தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. இந்த ஆட்சி முழுக்க ஊழலில் திளைத்து வருகிறது. எல்லா அமைச்சர்களும் வரிசையாக மக்கள் பணத்தை கொள்ளையடித்து வருகிறார்கள்.

உள்ளாட்சி தேர்தல்
உள்ளாட்சி தேர்தலை நடக்க விடமால் தமிழக அரசு செயல்ப்பட்டு வருகிறது. உள்ளாட்சி தேர்தலிலும் திமுகதான் தமிழகத்தில் வலிமையாக வெற்றிபெறும். தமிழக அமைச்சர்கள் ஊழல் செய்த பணத்தை பதுக்குவதற்காகவே வெளிநாடு சென்றார். மக்களின் நலனுக்காக அவர் வெளிநாடு செல்லவில்லை என்று ஸ்டாலின் குறிப்பிட்டு இருக்கிறார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications