சபாநாயகர் நோட்டீஸ்.. சசிகலாவிடம் கேட்டு முடிவெடுப்போம்.. கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு அதிரடி
கள்ளக்குறிச்சி: சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியது குறித்து சசிகலாவிடம் கேட்டு முடிவெடுப்போம் என்று கள்ளக்குறிச்சி அதிமுக எம்எல்ஏ பிரபு தெரிவித்தார்.
அதிமுக எம்எல்ஏக்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகிய மூன்று பேர் கட்சியின் கொள்கைகளுக்கு விரோதமான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக சபாநாயகரிடம் கொறடா ராஜேந்திரன் புகார் அளித்தார்.
அந்த புகாரின் அடிப்படையில் எம்எல்ஏக்கள் 3 பேரும் 7 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்த விளக்கம் ஏற்றுக் கொள்ளும்படி இல்லாத பட்சத்தில் 3 பேரும் தகுதி நீக்கம் செய்யப்படுவர் என தெரிகிறது.

வழக்கு
இதனிடையே சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர பேரவைச் செயலாளரிடம் திமுக மனு அளித்துள்ளது. மேலும் சபாநாயகர் தனபால் அனுப்பிய நோட்டீஸை எதிர்த்து மூவரும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அதில் சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஊடகங்கள் மூலம் அறிந்ததாகவும் சபாநாயகர் தங்கள் மீது நடவடிக்கை எடுக்க தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீதிமன்றம் செல்ல விருப்பம் இல்லை
இந்த நிலையில் இதுகுறித்து கள்ளக்குறிச்சி பிரபு, தமிழ் தொலைகாட்சி சேனலுக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறுகையில் சபாநாயகர் அனுப்பிய நோட்டீஸுக்கு விளக்கம் அளிக்க தயாராக இருக்கிறேன். தடை கோரி நீதிமன்றம் செல்ல விரும்பவில்லை. ரத்தினசபாபதியும், கலைச்செல்வனும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

வழக்கு போடமாட்டேன்
என்னுடைய செயல்பாடுகள் சரி என்பது எனது கருத்து. நான் எந்த கட்சிக்கும் செல்லவில்லை. நான் இருப்பது அதிமுகவில்தான். அதன் ஒரு அணியாக இருக்கும் அமமுகவுடன் தான் இருக்கிறேன் என்கிற போது வழக்கு போடும் அவசியம் எனக்கு கிடையாது.

சசிகலாவிடம் ஆலோசனை
நான் விளக்கம் கொடுக்க தயாராக உள்ளேன். இதில் எந்த தவறும் நடக்க வாய்ப்பில்லை. அப்படியிருந்தும் தவறு நடந்தால் சசிகலாவிடம் கேட்டு முடிவெடுக்கவும் தயாராக இருக்கிறேன் என பிரபு தெரிவித்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications