உள்ளாட்சித் தேர்தல் பணியில் இருந்த ஆசிரியர் மாரடைப்பால் மரணம் - விழுப்புரத்தில் சோகம்
விழுப்புரத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த அரசு பள்ளி ஆசிரியர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த அரசுப்பள்ளி ஆசிரியர் உயிரிழந்துள்ளார். அவரது உடல் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. மைலம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று கட்டாங்கொளத்தூர்,மதுராந்தகம், அச்சரபாக்கம் சித்தாமூர் புனித 4 ஒன்றியங்களில் இன்று இரண்டாம் கட்ட தேர்தலானது நடைபெற்று வருகிறது. காலை 7 மணி முதலே வாக்கு பதிவானது சுறுசுறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் பதட்டமான வாக்குச்சாவடிகளை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உட்பட்ட கட்டாங்கொளத்தூர்,சித்தமனுர், அச்சரப்பாக்கம் மதுராந்தகம் உள்ளிட்ட 4 ஒன்றியங்களிலும் தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்று வருவதாக தெரிவித்தார். 4 ஒன்றியங்களில் மொத்தம் 970 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டு அதில் பதட்டமான வாக்குசாவடிகளாக 120 வாக்குசாவடிகள் தேர்வு செய்யப்பட்டு அந்த வாக்குசாவடிகளில் கூடுதல் காவல்துறையினர்களும் மேலும் சிசிடிவி கேமராகள் கொண்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
விழுப்புரம் மாவட்டம் மயிலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட விடூர் வாக்குச்சாவடியில் தேர்தல் பணிக்காக நியமனம் செய்யப்பட்ட அரசு பள்ளி ஆசிரியர் மாரடைப்பால் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.
நாகர்கோவில் மாவட்டத்தை சேர்ந்தவர் மணிவாசகம் விழுப்புரம் வா.பகண்டை பகுதியில் அரசு பள்ளி ஆசிரியராக பணியாற்றி வந்தார். தேர்தலுக்காக விடூர் கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் தேர்தல் பணிக்காக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இன்று வாக்குப்பதிவு நடத்துவதற்கான ஏற்பாடுகளை நேற்று செய்துள்ளார். பின்னர் வீடு திரும்பிய அவருக்கு இரவு ஒரு மணி அளவில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.
உடனடியாக உறவினர்கள் அவரை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். அவரது உடல் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. தேர்தல் பணியில் ஈடுபட்ட ஆசிரியர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக மைலம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications