நீட் எனும் அரக்கன்.. தமிழகத்தில் மற்றொரு மாணவி தற்கொலை.. இரு நாளில் 3ஆவது உயிர் பலி!
Recommended Video
விழுப்புரம்: நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் மேலும் ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிஸா மாநிலம் தவிர்த்து நாடு முழுவதும் கடந்த மாதம் 5-ஆம் தேதி நீட் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் 14 லட்சம் மாணவர்கள் பங்கேற்றனர். இதன் முடிவுகள் நேற்று வெளியானது.
இந்த தேர்வில் தமிழகத்தில் 48.57 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த நிலையில் நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் மருத்துவக் கனவு தகர்ந்து போனதை அடுத்து நேற்றைய தினம் இரு மாணவிகள் தற்கொலை செய்து கொண்டனர்.

அவர்கள் திருப்பூர் மாணவி ரிதுஸ்ரீ, பட்டுக்கோட்டை மாணவி வைஷியா ஆகியோர் தற்கொலை செய்து கொண்டனர். இதில் ரிதுஸ்ரீ பிளஸ் 2 தேர்வில் 490 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். ஆனால் நீட்டில் ஒரே ஒரு மதிப்பெண்ணில் தோல்வி அடைந்ததால் விரக்தி அடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அது போல் பட்டுக்கோட்டையை சேர்ந்த வைஷியாவும் நீட் தோல்வியால் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இரு மாணவிகள் அடுத்தடுத்த பலியால் நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
இந்த நிலையில் நீட் தோல்வியால் மேலும் ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கூனிமேடுகுப்பத்தைச் சேர்ந்தவர் மோனிஷா.
இவர் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் பிளஸ் 1, பிளஸ் 2 படித்தார். நீட் தேர்வை எதிர்பார்த்து கொண்டிருந்த நிலையில் அவர் தோல்வி அடைந்ததால் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார். இரு நாட்களில் நீட் எனும் அரக்கன் 3 மாணவிகளின் உயிரை குடித்துள்ளது வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications