சிபிஎம் கட்சியின் புதிய மாநில செயலாளர் பெ சண்முகம்.. யார் இவர்? முழு பின்னணி
விழுப்புரம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். விழுப்புரத்தில் நடந்த மாநில மாநாட்டில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிபிஎம் கட்சியின் புதிய செயலாளராக அறிவிக்கப்பட்டு இருக்கும் பெ.சண்முகம் யார்? என்பது பற்றியும், கட்சியில் அவர் கடந்து வந்த பாதை குறித்த விவரங்களையும் இங்கே பார்க்கலாம்.
கே பாலகிருஷ்ணனின் பதவிக்காலம் நிறைவடைந்ததை அடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில செயலாளர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மாநிலச் செயலர் பதவிக்கு போட்டியிட விரும்பவில்லை என்று கே பாலகிருஷ்ணன் கூறியதாகவும் சொல்லப்படுகிறது. 72 வயது ஆனவர்களுக்கு செயலாளர் பதவி கொடுக்கப்படாது என்றும், ஒருவர் இரண்டு முறை மட்டுமே பதவி வகிக்க முடியும் என்ற விதியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் உள்ளது.

இதனால் கே பாலகிருஷ்ணன் ஏற்கனவே இரண்டு முறை பதவி வகித்து உள்ளதாலும், அவருக்கு தற்போது 71 வயது ஆகிவிட்டதாலும் இந்த பதவிக்கு போட்டியிடவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில செயலாளராக பெ சண்முகம் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
கட்சியின் 24 வது மாநில மாநாடு கடந்த 2 நாட்களாக விழுப்புரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்து வருகிறது. இந்த மாநாட்டில் மாநில செயலாளராக ஒருமனதாக பெ சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதேபோன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் 81 பேர் கொண்ட புதிய மாநிலக் குழுவும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
யார் இந்த பெ சண்முகம்?
பெ சண்முகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழு மற்றும் மத்திய குழு உறுப்பினராக பதவி வகித்து வருகிறார். இதேபோன்று மலைவாழ் மக்கள் தலைவராகவும் பதவி வகித்து இருக்கிறார். மார்க்சிஸ்ட் கட்சி இளைஞர் அமைப்பு, விவசாய சங்க மாநில செயலாளராகவும் பதவி வகித்துள்ளார். வாச்சாத்தி வன்கொடுமை வழக்கை இறுதிவரை நடத்தியவரும் இவர் தான். கடந்த ஆண்டு தமிழக அரசு பெ சண்முகத்திற்கு அண்ணல் அம்பேத்கர் விருது வழங்கி கவுரவித்துள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications