கத்தி எடுத்து என்னை கொலை செய்யுங்க!.. பிரஸ் மீட்டில் டென்ஷனான பாமக ஜிகே மணி
விழுப்புரம்: பாமகவில் ராமதாஸ், அன்புமணி இடையேயான ஈகோ உச்சத்தில் உள்ளது. தைலாபுரத்தில் நடக்கும் பாமக ஆலோசனை கூட்டத்தை அன்புமணி புறக்கணித்துள்ளார். இந்நிலையில் அக்கட்சியின் மூத்த தலைவர் ஜிகே மணி செய்தியாளர் சந்திப்பில் டென்ஷனான சம்பவம் நடைபெற்றுள்ளது.
பாமக-வில் உள்கட்சி பூசல் வெடித்துக் கொண்டிருக்கிறது. பாமக நிறுவனர் ராமதாஸ், கட்சி தலைவர் அன்புமணி இடையே பனிப்போர் நிலவி வருகிறது. தைலாபுரத்தில் நேற்று நடைபெற்ற மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தை அன்புமணி உள்ளிட்ட பலர் புறக்கணித்தனர். தொடர்ந்து இரண்டாவது நாளாக தைலாபுரத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தை அன்புமணி இன்றும் புறக்கணித்துள்ளார்.

இந்நிலையில் பாமக கௌரவ தலைவர் ஜி.கே மணி தைலாபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், "தமிழ்நாட்டில் பாமக, வன்னியர் சங்கம் ஒரு வலிமையான அமைப்பு. அதன் வலிமையை மாமல்லபுரம் மாநாடு நிரூபித்து காட்டிவிட்டது. ஒரு கட்சி என்றால் சலசலப்பு, நெருக்கடி இருப்பது இயல்புதான். இது எல்லா கட்சிகளிலும் இருக்கத்தான் செய்கிறது. நான் எதையும் மறைத்து பேசவில்லை.
பாமகவில் நெருக்கடியான சூழல் உருவாகியுள்ளது. பாமக குடும்ப பாசத்தில் இருக்கும் கட்சி. இங்கு மிகப்பெரிய நெருக்கடியே ஏற்பட்டாலும் விரைவாக தீர்வு எட்டப்படும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. ஐயாவிடம் நான் நேற்று இரவு வரை பேசினேன். அன்புமணியிடம் நேற்று இரவும் பேசினேன். இன்று காலையும் பேசினேன்.
என் ஆசை, நோக்கம் எல்லாம் ஒரு சுமூகமான தீர்வு விரைவில் வர வேண்டும் என்பதுதான். பாமகவின் வலிமையை மேலும் அதிகரித்து, வருகிற 2026 தேர்தலை வலிமையுடன் எதிர்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறோம். அதற்குண்டான முயற்சியை மேற்கொண்டு வருகிறோம். ஊடகம் என்பது மிகவும் சக்தி வாய்ந்தது.
பத்திரிகை, ஊடகங்களில் செய்தி வந்தால் நாடு முழுவதும், கடல் கடந்தும் பார்க்கிறார்கள். ஊடகங்களை நாங்கள் மதிக்கிறோம். நெருக்கடியான சூழலில் அதற்கு தீர்வு கிடைக்கும் வகையில் நல்ல செய்திகளை வெளியிட வேண்டும். அதை மேலும் மேலும் பெரிதுப்படுத்தும் வகையில் செய்தி வருவது மனதுக்கு கஷ்டமாக உள்ளது.
தனிப்பட்ட ஒருவருக்கு எதிராக செய்தி வெளியிடுவது அவரை கொலை செய்வதற்கு சமமானது. நேற்று நான் பயந்து ஓடினேன் என்று கூறுகிறார்கள். ஜனநாயகத்தின் நான்காவது தூணாக உள்ள ஊடக நண்பர்கள், எங்கள் கட்சியில் சுமூகமான சூழல் ஏற்பட ஆக்கபூர்வமான செய்திகளை வெளியிடுங்கள். பிரச்னையை பெரிதுப்படுத்த வேண்டாம்.
சுமூகமான பிரச்னை ஏற்பட தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். தேர்தல் வரப்போகிறது. ராமதாஸ், அன்புமணி இருவரும் விரைவில் சந்தித்து பேசுவார்கள். அந்த செய்தியும் வரத்தான் போகிறது. இது உள்கட்சி பிரச்னை. இதை ஊடகத்தில் பேசுவது நல்லதாக இருக்காது. இதற்கு விரைவில் தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறோம்." என்றார்.
அப்போது ஒரு செய்தியாளர், "பிரச்னைக்கு நீங்களும் முக்கிய காரணம் என்கிறார்களே." என்று கேள்வி எழுப்பினார். அதற்கு ஜிகே மணி, "எப்படியெல்லாம் கேள்வி கேட்கறீர்கள். இது மோசமான கேள்வி. விஷத்தையோ, கத்தியையோ அவரிடம் கொடுங்கள். அவர் என்னை குத்தி கொலை செய்யட்டும். நான் சிறு உயிருக்கு கூட கெடுதல் விளைவிக்க மாட்டேன்.
45 வருடங்களாக நான் அரசியலில் இருக்கிறேன். நான் அயோக்கியன் என்று யாரையாவது மனசாட்சியை தொட்டு சொல்ல சொல்லுங்கள். நான் அப்படி செய்பவனா. அப்படியிருந்தால் நான் பாமகவில் இருந்திருக்கவே மாட்டேனே. எம்ஜிஆர், கலைஞர் காலத்தில் இருந்து எத்தனையோ வாய்ப்புகளை விட்டு இங்கிருக்கிறேன்." என்றார்.
-
நெய்வேலி மண்ணின் மைந்தன் திருமால்வளவன் அந்த வீடியோ! வேல்முருகன் திமுக-பாமக கோட்டை தகர்க்க பிளான் -
சசிகலா - ராமதாஸ் கூட்டணி வைத்தது எப்படி? இதற்கு இப்படி ஒரு பேர் வைக்க திட்டமா? அட போங்க! -
“மாம்பழத்தை ஜூஸ் ஆக்கிவிடாதீர்கள்..” பாமக வழக்கில் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கருத்து! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு












Click it and Unblock the Notifications