தருமபுரி போச்சு.. விக்கிரவாண்டியில் அதோ கதி! ஒட்டுமொத்த குடும்பத்தை இறக்கிய ராமதாஸ்! ஆனால்..ரிசல்ட்?
விழுப்புரம்: பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே நடந்து முடிந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவுகள் வெளிவந்திருக்கிறது. திமுக வேட்பாளர் அன்னையர் சிவா மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றியை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் பாமகவின் தேர்தல் வியூகங்கள் இந்த தேர்தலில் படுதோல்வியை தந்திருக்கிறது. குறிப்பாக ஒட்டுமொத்த குடும்பத்தையே தேர்தலில் களம் இறக்கிய பாமக நிறுவனர் ராமதாஸுக்கு பலத்த பின்னடைவு ஏற்பட்டு இருக்கிறது என்கின்றனர் அரசியல் நிபுணர்கள்.
விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏவாக இருந்த புகழேந்தி மரணம் அடைந்ததை தொடர்ந்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. முதல் ஆளாக வேட்பாளரை களம் இறக்கிய திமுக பிரச்சாரத்தை முன்னதாகவே தொடங்கியது.

அதே நேரத்தில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக தேர்தலை புறக்கணித்தது. இதை அடுத்து தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாட்டாளி மக்கள் கட்சி தேர்தலை சந்திக்கும் என அறிவிக்கப்பட்டது.
கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் பாமக தனித்துப் போட்டியிட்டபோது, விக்கிரவாண்டி தொகுதியில் களமிறங்கிய சி.அன்புமணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அவர் அந்த தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட போதே சுமார் 40,000 வாக்குகளை பெற்றது குறிப்பிடத்தக்கது. தற்போது அதிமுகவும் தேர்தலை புறக்கணித்து இருப்பதால் வன்னியர் சமூக வாக்குகளும் அதிமுக வாக்குகளும் தங்களுக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் பாமக களம் இறங்கியது.
ஆனால் தேர்தல் முடிவுகள் பாமகவுக்கு பாதகமாகவே இருக்கிறது. ஆயிரக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் அன்னியூர் சிவாவின் வெற்றி உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. அதே நேரத்தில் தேர்தலில் பாமகவின் யூகங்கள் தவிடு பொடியாக இருப்பதாக கூறுகின்றனர் அரசியல் நிபுணர்கள். குறிப்பாக ஒட்டுமொத்த குடும்பத்தையே விக்கிரவாண்டி தொகுதியில் களம் இறக்கினார் அக்கட்சியின் நிறுவனரான ராமதாஸ். தர்மபுரி தேர்தலை போலவே விக்கிரவாண்டி தொகுதி தேர்தலும் பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
தர்மபுரி மக்களவை தேர்தலில் இதுவரை அரசியலில் பரிட்சயம் இல்லாத சௌமியா அன்புமணி களமிறங்கினார். அவருக்கு ஆதரவாக அவரது கணவர் அன்புமணி ராமதாஸ், மகள்கள் சங்கமித்ரா உள்ளிட்ட பலர் வீதி வீதியாக சென்று பிரச்சாரம் மேற்கொண்டனர். ஆனால் சுமார் 20,000 வாக்குகள் வித்தியாசத்தில் சௌமியா அன்புமணி தோல்வியை சந்தித்தார். இந்த நிலையில் அதே பாணியை பின்பற்றி விக்கிரவாண்டி தொகுதியிலும் ஒட்டு மொத்த குடும்பமும் களமிறங்கி பிரச்சாரம் மேற்கொண்டது.
அன்புமணி ராமதாஸ், சௌமியா அன்புமணி, சங்கமித்ரா அன்புமணி ஆகியோர் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தனர். குறிப்பாக பட்டியலின மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் அன்புமணி ராமதாஸும், சங்கமித்ரா அன்புமணியும் வாக்கு சேகரித்தனர். சங்கமித்ரா அன்புமணியின் பிரசாரம் தேர்தலில் கவனத்தை பெற்றது. தேர்ந்த அரசியல்வாதி போல அவர் பிரச்சாரம் மேற்கொள்வதாக பாமகவினர் கூறி வந்தனர். இதனால் அவருக்கு கட்சியில் விரைவில் பதவி கொடுக்கப்படலாம் எனவும் பேச்சு எழுந்தது.
மேலும் வன்னியர் இட ஒதுக்கீடு, மதுவிலக்கு உள்ளிட்ட முழக்கங்களை முன்வைத்து பாமகவின் பிரசாரம் இருந்தது. இருந்த போதும் பாமகவுக்கு இந்த தேர்தலிலும் தோல்வியே கிடைத்திருக்கிறது. அதிமுக வாக்குகளும் திமுகவுக்கு சென்றிருப்பதாக கூறுகின்றனர். இதன் காரணமாக ராமதாஸின் குடும்ப அரசியல் வியூகம் பொய்த்துப் போய்விட்டதாக திமுகவினர் கூறுகின்றனர். மேலும் இந்த தோல்வியின் மூலம் சட்டமன்ற தேர்தல் கூட்டணிகளும் பிரச்சனை என வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications