Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சட்டசபைத் தேர்தலில் ராமதாஸ் தனித்து போட்டியிட மாட்டார்.. யாருடன் கூட்டணி? நேரடியாக சொன்ன ஜிகே மணி!

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: சட்டசபைத் தேர்தலில் பாமக நிறுவனர் ராமதாஸ் தனித்துப் போட்டியிட மாட்டார் என்று அக்கட்சியின் கெளரவத் தலைவர் ஜிகே மணி தெரிவித்துள்ளார். யாருடன் கூட்டணி என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை என்று கூறிய ஜிகே மணி, யாருடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்பதை வெளியில் சொல்வது சரியாக இருக்காது என்றும் தெரிவித்துள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையிலான மோதல் காரணமாக, இரு தரப்பும் தனித்தனியாக தேர்தலை சந்திக்க உள்ளது. ஏற்கனவே அன்புமணி தரப்பு பாமக அதிமுக - பாஜக கூட்டணியில் இணைந்துவிட்டது. அதிமுக - பாமக இடையிலான கூட்டணி பேச்சுவார்த்தையும் நிறைவடைந்துவிட்டது. விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.

Ramadoss

அன்புமணி தரப்பு பாமகவுக்கு 17 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்ய சபா சீட் ஒதுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மறுபக்கம் ராமதாஸ் தரப்பு பாமகவினர் திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். ஆனால் விசிக தலைவர் திருமாவளவன் ஒப்புதல் இன்றி ராமதாஸ் உடனான கூட்டணியை இறுதி செய்ய முடியாது என்று ஸ்டாலின் கையை விரித்துவிட்டார்.

இதனால் திருமாவளவனை சமாதானம் செய்யும் முயற்சிகள் நடந்தது. ஆனால் 14 ஆண்டுகளுக்கு முன்பாக எடுத்த முடிவில் உறுதியாக இருக்கிறோம் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துவிட்டார். பாமக எம்எல்ஏ அருள், ராமதாஸ் பெறாத பிள்ளை திருமாவளவன் என்று கூறிய பின்னரும், அவர் இறங்கி வரவில்லை. அதேபோல் திமுகவுடன் விசிகவின் முக்கியத்துவத்தை அறிந்து அவர்களுடன் இணக்கமாக உள்ளது.

இதனால் ராமதாஸ் யாருடன் கூட்டணி அமைப்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது. என்டிஏ கூட்டணியில் சேர்க்க கூடாது என்பதில் அன்புமணி பிடிவாதமாக உள்ளார். இதனால் அதிமுக தரப்பில் ராமதாஸ் தரப்புடன் பேசவில்லை. பாஜக மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இதனால் ராமதாஸ் தவெக கூட்டணியில் இணைவாரா அல்லது தனித்துப் போட்டியிடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அதேபோல் தேர்தலில் போட்டியிட விரும்பும் பாமகவினருக்கு நேர்காணலை தைலாபுரத்தில் ராமதாஸ் நடத்தி வருகிறார். இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து ஸ்ரீகாந்த், ஜிகே மணி இருவரும் பேசுகையில், சட்டசபைத் தேர்தலில் பாமக நிறுவனர் ராமதாஸ் தனித்துப் போட்டியிட மாட்டார். கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது. யாருடன் பேச்சுவார்த்தை நடக்கிறது என்பதை வெளியில் சொல்ல முடியாது.

விரைவில் கூட்டணி குறித்த அறிவிப்பை ராமதாஸ் வெளியிடுவார் என்று தெரிவித்துள்ளார். மேலும் பாமகவின் மாம்பழ சின்னம் தொடர்பான வழக்கு நாளை விசாரணைக்கு வரவுள்ளது. இதனால் மாம்பழ சின்னம் அன்புமணி தரப்புக்கு ஒதுக்கப்படுமா அல்லது ராமதாஸ் தரப்புக்கு ஒதுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+