சட்டசபைத் தேர்தலில் ராமதாஸ் தனித்து போட்டியிட மாட்டார்.. யாருடன் கூட்டணி? நேரடியாக சொன்ன ஜிகே மணி!
விழுப்புரம்: சட்டசபைத் தேர்தலில் பாமக நிறுவனர் ராமதாஸ் தனித்துப் போட்டியிட மாட்டார் என்று அக்கட்சியின் கெளரவத் தலைவர் ஜிகே மணி தெரிவித்துள்ளார். யாருடன் கூட்டணி என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை என்று கூறிய ஜிகே மணி, யாருடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்பதை வெளியில் சொல்வது சரியாக இருக்காது என்றும் தெரிவித்துள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையிலான மோதல் காரணமாக, இரு தரப்பும் தனித்தனியாக தேர்தலை சந்திக்க உள்ளது. ஏற்கனவே அன்புமணி தரப்பு பாமக அதிமுக - பாஜக கூட்டணியில் இணைந்துவிட்டது. அதிமுக - பாமக இடையிலான கூட்டணி பேச்சுவார்த்தையும் நிறைவடைந்துவிட்டது. விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.

அன்புமணி தரப்பு பாமகவுக்கு 17 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்ய சபா சீட் ஒதுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மறுபக்கம் ராமதாஸ் தரப்பு பாமகவினர் திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். ஆனால் விசிக தலைவர் திருமாவளவன் ஒப்புதல் இன்றி ராமதாஸ் உடனான கூட்டணியை இறுதி செய்ய முடியாது என்று ஸ்டாலின் கையை விரித்துவிட்டார்.
இதனால் திருமாவளவனை சமாதானம் செய்யும் முயற்சிகள் நடந்தது. ஆனால் 14 ஆண்டுகளுக்கு முன்பாக எடுத்த முடிவில் உறுதியாக இருக்கிறோம் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துவிட்டார். பாமக எம்எல்ஏ அருள், ராமதாஸ் பெறாத பிள்ளை திருமாவளவன் என்று கூறிய பின்னரும், அவர் இறங்கி வரவில்லை. அதேபோல் திமுகவுடன் விசிகவின் முக்கியத்துவத்தை அறிந்து அவர்களுடன் இணக்கமாக உள்ளது.
இதனால் ராமதாஸ் யாருடன் கூட்டணி அமைப்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது. என்டிஏ கூட்டணியில் சேர்க்க கூடாது என்பதில் அன்புமணி பிடிவாதமாக உள்ளார். இதனால் அதிமுக தரப்பில் ராமதாஸ் தரப்புடன் பேசவில்லை. பாஜக மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இதனால் ராமதாஸ் தவெக கூட்டணியில் இணைவாரா அல்லது தனித்துப் போட்டியிடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதேபோல் தேர்தலில் போட்டியிட விரும்பும் பாமகவினருக்கு நேர்காணலை தைலாபுரத்தில் ராமதாஸ் நடத்தி வருகிறார். இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து ஸ்ரீகாந்த், ஜிகே மணி இருவரும் பேசுகையில், சட்டசபைத் தேர்தலில் பாமக நிறுவனர் ராமதாஸ் தனித்துப் போட்டியிட மாட்டார். கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது. யாருடன் பேச்சுவார்த்தை நடக்கிறது என்பதை வெளியில் சொல்ல முடியாது.
விரைவில் கூட்டணி குறித்த அறிவிப்பை ராமதாஸ் வெளியிடுவார் என்று தெரிவித்துள்ளார். மேலும் பாமகவின் மாம்பழ சின்னம் தொடர்பான வழக்கு நாளை விசாரணைக்கு வரவுள்ளது. இதனால் மாம்பழ சின்னம் அன்புமணி தரப்புக்கு ஒதுக்கப்படுமா அல்லது ராமதாஸ் தரப்புக்கு ஒதுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.
-
Election Exclusive: விஜய் + சசிகலா + ராமதாஸ்? தமிழக அரசியலில் பரபரப்பைக் கிளப்பும் 3வது கூட்டணி? கணக்கு சரியா வருமா? -
சசிகலா - ராமதாஸ் கூட்டணி வைத்தது எப்படி? இதற்கு இப்படி ஒரு பேர் வைக்க திட்டமா? அட போங்க! -
சீட் தரேன்.. யாராவது இருக்கீங்களா? தேடி தேடி ஆள் பிடிக்கும் ராமதாஸ்.. இப்படி ஒரு மோசமான நிலையா? -
2026 தேர்தலில் புதிய சக்திகள்! 5 முனை போட்டிக்கு வழிவகுத்த ஜூனியர்ஸ்! யாருக்கு சாதகம்? பாதகம்? -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ்












Click it and Unblock the Notifications