தமிழகத்திற்கு நிரந்தர டிஜிபி.. யுபிஎஸ்சி பரிந்துரைக்கு ராமதாஸ் வரவேற்பு.. விஜய்க்கு வைத்த கோரிக்கை
விழுப்புரம்: தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக நிரந்தர காவல்துறை தலைமை இயக்குநர் (DGP) நியமிக்கப்படாமல், தற்காலிக பொறுப்பில் காவல்துறை நிர்வாகம் செயல்பட்டு வந்த நிலையில், தற்போது மத்திய பணியாளர் தேர்வாணையம் (UPSC) தமிழ்நாட்டின் புதிய டிஜிபி நியமனத்திற்கான மூவர் பெயர்ப் பட்டியலை இறுதி செய்துள்ளது வரவேற்கத்தக்க முன்னேற்றம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். அத்துடன் தமிழ்நாட்டின் நிரந்தர காவல்துறை தலைமை இயக்குநர் நியமனத்தை சட்ட நடைமுறைகளுக்கு உட்பட்டு உடனடி நியமனம் செய்ய வேண்டும் என்று முதல்வர் விஜய்க்கு வலியுறுத்தியுள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுகையில், "தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக நிரந்தர காவல்துறை தலைமை இயக்குநர் (DGP) நியமிக்கப்படாமல், தற்காலிக பொறுப்பில் காவல்துறை நிர்வாகம் செயல்பட்டு வந்த நிலையில், தற்போது மத்திய பணியாளர் தேர்வாணையம் (UPSC) தமிழ்நாட்டின் புதிய டிஜிபி நியமனத்திற்கான மூவர் பெயர்ப்பட்டியலை இறுதி செய்துள்ளது வரவேற்கத்தக்க முன்னேற்றமாகும்.

அந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள சந்தீப் ராய் ரத்தோர், ராஜீவ் குமார் மற்றும் மகேஸ் குமார் அகர்வால் ஆகிய மூவரும் அனுபவமிக்க உயர் அலுவலர்கள் ஆவர். உச்சநீதிமன்றத்தின் காவல்துறை சீர்திருத்த வழிகாட்டுதல்கள் மற்றும் காவல்துறை தலைமை நியமனத்திற்கு தொடர்புடைய சட்ட நடைமுறைகளின் படி, UPSC பரிந்துரைத்த பட்டியலிலிருந்து மாநில அரசு உடனடியாக ஒரு தகுதியான அதிகாரியை தேர்வு செய்து தமிழ்நாட்டின் நிரந்தர டிஜிபியாக நியமிக்க வேண்டும்.
தற்போது தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு தொடர்பான பல்வேறு சவால்கள் நிலவி வரும் சூழலில், முழுநேர நிரந்தர காவல்துறை தலைமை இயக்குநர் நியமனம் மிகவும் அவசியமானதாக உள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு, அதிகரித்து வரும் குற்றச் சம்பவங்கள், சமூக அமைதி, பொதுமக்களின் பாதுகாப்பு உணர்வு மற்றும் சட்டம்-ஒழுங்கை வலுப்படுத்துவது போன்ற முக்கிய பொறுப்புகளை திறம்பட முன்னெடுக்க வலுவான காவல்துறை தலைமையே தேவைப்படுகிறது.
எனவே, தற்போது பதவியேற்றுள்ள தமிழக அரசு, யுபிஎஸ்சி பரிந்துரைத்துள்ள மூவர் பட்டியலிலிருந்து தமிழ்நாட்டிற்கு சிறந்த மற்றும் திறமையான அதிகாரியை தேர்வு செய்து ஓரிரு நாட்களுக்குள் நிரந்தர டிஜிபியாக நியமனம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். மேலும், காவல்துறை நிர்வாகம் அரசியல் சார்பற்ற, திறன் மிக்க மற்றும் சட்டப்பூர்வமான முறையில் செயல்படுவதற்காக இந்த நியமனத்திற்கு அனைத்து அரசியல் கட்சிகளும், குறிப்பாக எதிர்க்கட்சிகளும், ஜனநாயக பொறுப்புணர்வுடன் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.
தமிழக மக்களின் பாதுகாப்பு, சட்டத்தின் ஆட்சி மற்றும் காவல்துறையின் நிர்வாக நிலைத்தன்மையை உறுதி செய்யும் வகையில், இந்த டிஜிபி நியமனத்தை தமிழக அரசு தாமதமின்றி மேற்கொள்ள வேண்டும்" இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.
-
ஓடியாங்க, ஓடியாங்க.. தமிழ்நாட்டில் முதலீடு.. விஜய் போட்ட உத்தரவு.. அமைச்சர் கீர்த்தனா-வின் 4 முக்கிய வாக்குறுதி! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
தூயசக்தி விஜய்.. மின் வெட்டுக்கு என்ன பதில் சொல்லப்போகிறார்? பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி -
கவர்னர் இனி யுனிவர்சிட்டி வேந்தரா? விஜய்யின் ஒப்புதலோடுதான் அமைச்சர் சொல்கிறாரா.. விசிக கேள்வி -
தமிழகத்தின் புதிய டிஜிபி யார்? விஜய் டிக் அடிக்கும் அந்த நேர்மையான அதிகாரி! வெளியான தகவல் -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படை திட்டம் ஒத்திவைப்பு.. பின்னணியில் முதல்வர் விஜய்யின் டெல்லி பயணம்! -
சமூக வலைதளங்களை தவெகவினர் தந்திரமாக பயன்படுத்தினார்கள்.. கே.என்.நேரு பேச்சு -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
பல்கலைக்கழக வேந்தராக ஆளுநரா? அமைச்சர் விஸ்வநாதன் மீது பொன்முடி விமர்சனம் -
திருவாரூர் மக்களுக்கு குட்நியூஸ்.. விஜயை டேக் செய்த மத்திய அமைச்சர்! -
தவெகவில் புதிய அதிகார மையம்.. கூடுதல் பவரோடு ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி ஆனந்த்.. கவனிச்சீங்களா? -
அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து அடுத்தடுத்து தவெகவில் இணைவது சரியில்லை.. மா.கம்யூனிஸ்ட் கோபம் -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபி யார்? 3 சீனியர் ஐபிஎஸ் பெயர்களுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்.. யார் இவர்கள்?














Click it and Unblock the Notifications