திருவிழா- தலித்துகளை காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்த ஒட்டனந்தல் ஜாதி பஞ்சாயத்து!
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் ஒட்டனந்தல் கிராமத்தில் திருவிழா நடத்தியதால் ஒரு ஜாதியினர் முன்பு தலித் பெரியவர்கள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது. இந்த கொடுமை குறித்து மனித உரிமைகள் ஆணையம் விசாரிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.
Recommended Video
விழுப்புரம் மாவட்டத்தில் திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் சரகத்துக்குட்பட்டது ஒட்டனந்தல் கிராமம். இந்த கிராமத்தில் தலித் சமூகத்தினர் அண்மையில் திருவிழாவை நடத்தி இருக்கின்றனர்.

தலித்துகள் திருவிழா
முன்னதாக தங்களது அனுமதி இல்லாமல் தலித் மக்கள் திருவிழா நடத்துவதாக போலீசில் மற்றொரு ஜாதியினர் புகார் தெரிவித்தனர். இதனால் அங்கு வந்த போலீசார் ஒலிபெருக்கிகளை பறிமுதல் செய்தனர். பின்னர் ஒட்டனந்தல் தலித் மக்கள் காவல்நிலையம் சென்று மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்தனர்.

ஜாதி பஞ்சாயத்து
இந்நிலையில் தங்களது அனுமதி பெறாமல் திருவிழா நடத்தியது குற்றம் என கூறி ஒட்டனந்தல் கிராமத்தை சேர்ந்த ஒரு ஜாதியினர் பஞ்சாயத்தை கூட்டியுள்ளனர். இந்த பஞ்சாயத்தில் அனுமதி பெறாமல் திருவிழா நடத்தியதால் அதை முன்னின்று நடத்தியவர்கள் பஞ்சாயத்து காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என முடிவு செய்தனர்.

மன்னிப்பு கேட்க வைத்த கொடூரம்
இதனையடுத்து திருவிழாவை நடத்திய ஒட்டனந்தல் கிராமத்தை சேர்ந்த 3 பெரியவர்கள் மற்றொரு ஜாதியினர் கூட்டிய பஞ்சாயத்தில் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டனர். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

மனித உரிமைகள் ஆணையம் விசாரிக்க கோரிக்கை
இந்த கொடூரமான பஞ்சாயத்து தொடர்பாக மனித உரிமைகள் ஆணையம் விசாரிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். சமூக வலைதளங்களிலும் இந்த சம்பவம் கடுமையான விவாதப் பொருளாகி உள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications