'விட்டா கிறுக்கனாக்கிடுவாங்க'.. அபாய சங்கிலியை பிடித்து இழுத்த டிடிஆர்.. வைகை எக்ஸ்பிரஸ் கூத்து
விழுப்புரம் : வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு செய்த பெட்டியில் ஏறி அமர்ந்து கொண்ட அன்ரிசர்வ்டு பெட்டி பயணிகள் இறங்க மறுத்துவிட்டனர். இதனால் பயணிகள் மற்றும் டிக்கெட் பரிசோதகர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த டிக்கெட் பரிசோதகர் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலையே நடுவழியில் நிறுத்தினார்.
சென்னையில் இருந்து தினமும் மதுரைக்கு மதிய வேளையில் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் கிளம்புகிறது. இந்த ரயில் முழுக்க முழுக்க உட்காரும் வசதி கொண்ட ரயில் ஆகும். படுக்கை வசதி இல்லை.

இந்த ரயிலில் ஏழை மக்கள் பலர் சென்னையில் இருந்து மதுரை உள்பட தங்கள் சொந்த ஊருக்கு செல்கிறார்கள். வெறும் 8 மணி நேரத்திற்கு முன்பாகவே இந்த ரயில் மதுரை போய்விடும் என்பதால், இந்த ரயிலுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது. 50 வருடங்களை தாண்டி இயங்கும் இந்த வைகை எக்ஸ்பிரஸ் மதுரை மக்களின் அடையாளங்களில் ஒன்று.
இந்த ரயிலில் முன்பதிவு செய்த பெட்டிகளில் இடம் இல்லை என்றாலும், அன்ரிசர்வ்டு பெட்டி பயணிகளும் ஏறிக்கொள்வார்கள். ஆனால் முன்பதிவு செய்த பயணிகள் வந்தால் எழுந்து கொள்வார்கள்.இப்படித்தான் இருந்து வருகிறது. அதேநேரம் முன்பதிவு செய்த பெட்டிகளில், சில சமயங்களில் பொது பெட்டி போல் கடுமையான கூட்டமும் ஏற்படுவது உண்டு.
இந்நிலையில் நேற்று சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு வழக்கம் போல் வைகை எக்ஸ்பிரஸ் புறப்பட்டு சென்றது. இந்த ரயில் விழுப்புரம் ரயில் நிலையத்துக்கு மாலை 3.55 மணிக்கு வருவது வழக்கம் ஆகும். நேற்று வழக்கம்போல் சென்னையில் இருந்து புறப்பட்ட வைகை எக்ஸ்பிரஸ் ரயில் மாலை 3.55 மணிக்கு விழுப்புரம் ரயில் நிலைய 4-வது நடைமேடைக்கு வந்தது.
அப்போது விழுப்புரத்தில் இருந்து முன்பதிவு செய்யாத பெட்டியில் பயணம் செய்ய பயணச்சீட்டு எடுத்த பயணிகள் பலர், முன்பதிவு செய்யும் பெட்டிகளில் ஏறி அங்குள்ள இருக்கைகளில் அமர்ந்துவிட்டார்கள். இதனால் ஏற்கனவே முன்பதிவு செய்து பயணச்சீட்டு எடுத்த பயணிகள் கழிவறைக்கு கூட செல்ல முடியாத அளவிற்கு மிகவும் சிரமப்பட்டனர். உடனே அவர்கள், இதுபற்றி ரயில்வே டிக்கெட் பரிசோதகரிடம் முறையிட்டு அவர்களை முன்பதிவு செய்யாத பெட்டிக்கு செல்லுமாறு அறிவுறுத்தினார்கள்.
அதன்படி ரயில்வே டிக்கெட் பரிசோதகரும் அந்த பயணிகளிடம் சென்று முன்பதிவு செய்யாத பெட்டிக்கு செல்லுமாறு வலியுறுத்தினார். ஆனால் அந்த பயணிகள் செல்ல மறுத்து ரயில்வே டிக்கெட் பரிசோதகர் மற்றும் முன்பதிவு செய்து பயணச்சீட்டு எடுத்துள்ள பயணிகளிடம் கடும் வாக்குவாதம் செய்தார்கள்
இதனிடையே அந்த ரயில், மாலை 4 மணிக்கு விழுப்புரத்தில் இருந்து புறப்பட்டது. உடனே டிக்கெட் பரிசோதகர், திடீரென அபாய சங்கிலியை பிடித்து இழுத்தார். இதனால் அந்த ரயில் நடைமேடையிலேயே நின்றுவிட்டது. இதுகுறித்த தகவல் அறிந்ததும் விழுப்புரம் ரயில்வே போலீசாரும், ரயில்வே பாதுகாப்பு படை போலீசாரும் அங்கு விரைந்து சென்றனர்.
அங்கு வாக்குவாதத்தில் ஈடுபட்ட பயணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். அதன் பிறகு பிரச்சினைக்குரிய பயணிகளை முன்பதிவு செய்யாத பெட்டிக்கு அனுப்பி வைத்தார்கள். அதனை தொடர்ந்து வைகை எக்ஸ்பிரஸ் ரயில் 15 நிமிடம் தாமதமாக மாலை 4.15 மணிக்கு விழுப்புரத்தில் இருந்து புறப்பட்டுச்சென்றது. டிக்கெட் பரிசோதகரே அபாயசங்கிலியை பிடித்து இழுத்த சம்பவத்தினால் விழுப்புரம் ரயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications