Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'விட்டா கிறுக்கனாக்கிடுவாங்க'.. அபாய சங்கிலியை பிடித்து இழுத்த டிடிஆர்.. வைகை எக்ஸ்பிரஸ் கூத்து

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம் : வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு செய்த பெட்டியில் ஏறி அமர்ந்து கொண்ட அன்ரிசர்வ்டு பெட்டி பயணிகள் இறங்க மறுத்துவிட்டனர். இதனால் பயணிகள் மற்றும் டிக்கெட் பரிசோதகர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த டிக்கெட் பரிசோதகர் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலையே நடுவழியில் நிறுத்தினார்.

சென்னையில் இருந்து தினமும் மதுரைக்கு மதிய வேளையில் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் கிளம்புகிறது. இந்த ரயில் முழுக்க முழுக்க உட்காரும் வசதி கொண்ட ரயில் ஆகும். படுக்கை வசதி இல்லை.

Vaigai Express Train Ticket Checker Pulled Danger Chain due to Passengers heat argument

இந்த ரயிலில் ஏழை மக்கள் பலர் சென்னையில் இருந்து மதுரை உள்பட தங்கள் சொந்த ஊருக்கு செல்கிறார்கள். வெறும் 8 மணி நேரத்திற்கு முன்பாகவே இந்த ரயில் மதுரை போய்விடும் என்பதால், இந்த ரயிலுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது. 50 வருடங்களை தாண்டி இயங்கும் இந்த வைகை எக்ஸ்பிரஸ் மதுரை மக்களின் அடையாளங்களில் ஒன்று.

இந்த ரயிலில் முன்பதிவு செய்த பெட்டிகளில் இடம் இல்லை என்றாலும், அன்ரிசர்வ்டு பெட்டி பயணிகளும் ஏறிக்கொள்வார்கள். ஆனால் முன்பதிவு செய்த பயணிகள் வந்தால் எழுந்து கொள்வார்கள்.இப்படித்தான் இருந்து வருகிறது. அதேநேரம் முன்பதிவு செய்த பெட்டிகளில், சில சமயங்களில் பொது பெட்டி போல் கடுமையான கூட்டமும் ஏற்படுவது உண்டு.

இந்நிலையில் நேற்று சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு வழக்கம் போல் வைகை எக்ஸ்பிரஸ் புறப்பட்டு சென்றது. இந்த ரயில் விழுப்புரம் ரயில் நிலையத்துக்கு மாலை 3.55 மணிக்கு வருவது வழக்கம் ஆகும். நேற்று வழக்கம்போல் சென்னையில் இருந்து புறப்பட்ட வைகை எக்ஸ்பிரஸ் ரயில் மாலை 3.55 மணிக்கு விழுப்புரம் ரயில் நிலைய 4-வது நடைமேடைக்கு வந்தது.

அப்போது விழுப்புரத்தில் இருந்து முன்பதிவு செய்யாத பெட்டியில் பயணம் செய்ய பயணச்சீட்டு எடுத்த பயணிகள் பலர், முன்பதிவு செய்யும் பெட்டிகளில் ஏறி அங்குள்ள இருக்கைகளில் அமர்ந்துவிட்டார்கள். இதனால் ஏற்கனவே முன்பதிவு செய்து பயணச்சீட்டு எடுத்த பயணிகள் கழிவறைக்கு கூட செல்ல முடியாத அளவிற்கு மிகவும் சிரமப்பட்டனர். உடனே அவர்கள், இதுபற்றி ரயில்வே டிக்கெட் பரிசோதகரிடம் முறையிட்டு அவர்களை முன்பதிவு செய்யாத பெட்டிக்கு செல்லுமாறு அறிவுறுத்தினார்கள்.

அதன்படி ரயில்வே டிக்கெட் பரிசோதகரும் அந்த பயணிகளிடம் சென்று முன்பதிவு செய்யாத பெட்டிக்கு செல்லுமாறு வலியுறுத்தினார். ஆனால் அந்த பயணிகள் செல்ல மறுத்து ரயில்வே டிக்கெட் பரிசோதகர் மற்றும் முன்பதிவு செய்து பயணச்சீட்டு எடுத்துள்ள பயணிகளிடம் கடும் வாக்குவாதம் செய்தார்கள்

இதனிடையே அந்த ரயில், மாலை 4 மணிக்கு விழுப்புரத்தில் இருந்து புறப்பட்டது. உடனே டிக்கெட் பரிசோதகர், திடீரென அபாய சங்கிலியை பிடித்து இழுத்தார். இதனால் அந்த ரயில் நடைமேடையிலேயே நின்றுவிட்டது. இதுகுறித்த தகவல் அறிந்ததும் விழுப்புரம் ரயில்வே போலீசாரும், ரயில்வே பாதுகாப்பு படை போலீசாரும் அங்கு விரைந்து சென்றனர்.

அங்கு வாக்குவாதத்தில் ஈடுபட்ட பயணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். அதன் பிறகு பிரச்சினைக்குரிய பயணிகளை முன்பதிவு செய்யாத பெட்டிக்கு அனுப்பி வைத்தார்கள். அதனை தொடர்ந்து வைகை எக்ஸ்பிரஸ் ரயில் 15 நிமிடம் தாமதமாக மாலை 4.15 மணிக்கு விழுப்புரத்தில் இருந்து புறப்பட்டுச்சென்றது. டிக்கெட் பரிசோதகரே அபாயசங்கிலியை பிடித்து இழுத்த சம்பவத்தினால் விழுப்புரம் ரயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+