விக்கிரவாண்டி.. யார் இந்த முத்தமிழ்ச் செல்வன்.. அவருடைய பின்னணி என்ன?
Recommended Video
சென்னை: விக்கிரவாண்டி தொகுதிக்கு அதிமுக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள முத்தமிழ்ச்செல்வன் முதல்வர் இ.பி.எஸ்.ஆதரவாளர் எனக் கூறப்படுகிறது.
விக்கிரவாண்டி சட்டசபை இடைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை அதிமுக தலைமைக் கழகம் இன்று அறிவித்தது. அதன்படி முத்தமிழ்ச்செல்வன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
விக்கிரவாண்டி தொகுதி வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன்1982-ம் ஆண்டு முதல் அதிமுகவில் உறுப்பினராக உள்ளார். அவருடைய அப்பா ஆசிரியராகவும், அம்மா ஊராட்சிமன்றத் தலைவராகவும் இருந்தனர். இவரும் கூட்டுறவு சங்கம் உள்ளிட்ட பல அரசுப்பதவிகளில் இருந்தவர்.

பெரும் பணக்காரர்
காணை ஒன்றியத்திற்குட்பட்ட கல்பட்டு கிராமத்தில் பெருமளவு நிலபுலங்களுக்கு சொந்தக்காரர் முத்தமிழ்ச்செல்வன். கட்சிப்பணிகள் போக மீத நேரம் தனது தோட்டத்திலேயே நேரத்தை செலவழிப்பவர். இவருடைய மனைவி கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்னர் இறந்துவிட்ட நிலையில் தற்போது மகனுடன் வசித்து வருகிறார்.

இ.பி.எஸ்.க்கு ஆதரவு
முத்தமிழ்ச்செல்வனுக்கு ஒன்றியச்செயலாளர் பதவி கிடைக்க 2015-ம் ஆண்டு பரிந்துரை செய்தவர் முன்னாள் ராஜ்யசபா எம்.பி. மருத்துவர் லட்சுமணன். ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் தொடங்கிய போது லட்சுமணன் ஓ.பி.எஸ்.க்கு ஆதரவு தெரிவித்து அவர் பக்கம் சென்றார். அப்போது ஒன்றியச் செயலாளராக இருந்த முத்தமிழ்ச்செல்வனை லட்சுமணன் ஓ.பி.எஸ்.அணிக்கு வருமாறு பலமுறை அழைப்பு விடுத்தார்.

அமைச்சர் ஆதரவு
ஆனால் அவர் நேராக அமைச்சர் சி.வி.சண்முகத்திடம் சரணடைந்து அவரது ஆதரவாளராக மாறினார். அன்று முதல் இன்று வரை அமைச்சர் சண்முகத்தின் வாக்கை வேதவாக்காக எடுத்துக்கொண்டு செயல்பட்டு வருகிறார் முத்தமிழ்ச்செல்வன்.

டிக் அடித்த இ.பி.எஸ்.
மொத்தம் 36 பேர் விருப்பமனு அளித்து நேர்காணலில் பங்கேற்ற நிலையில், இக்கட்டான சூழலில் தன்னோடு இருந்த காரணத்திற்காக முத்தமிழ்ச்செல்வனை டிக் அடித்து அவருக்கு வாய்ப்பு தந்துள்ளார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications