கள்ளச்சாராயம் ஆறாக ஓடுகிறது..பல உயிர் போயும் யாரும் குரல் கொடுக்கலையே?எடப்பாடி பழனிச்சாமி
விழுப்புரம்: கள்ளச்சாராய விற்பனையை தடுக்க அரசு தவறி விட்டதால் பல உயிர்களை இழந்திருக்கிறோம் என்றும் சட்டசபை எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். இத்தனை உயிர்கள் பறிபோன பின்னரும் எந்த சமூக பேராளியோ, நடிகரோ கள்ளச்சாராய மரணத்திற்கு குரல் கொடுக்கவில்லை என்றும் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை அடுத்த மீனவ கிராமமான எக்கியார் குப்பத்தில் சனிக்கிழமையன்று அமரன் என்பவர் கள்ளச்சாராயம் விற்பனை செய்துள்ளார். கள்ளச்சாராயம் குடித்ததில் இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் 50க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்றுவருகிறார்கள்.

கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவே எதிர்கட்சியினர் இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ளனர் கள்ளச்சாரய மரணத்திற்கு அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் மெத்தனால் கலந்த விஷ சாராயத்தை குடித்ததால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக காவல்துறை உயரதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதனிடையே உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் மு.க ஸ்டாலின், தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய பின்னர் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறினார்.
இந்த நிலையில் இன்று முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சென்ற எடப்பாடி பழனிச்சாமி, சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, திமுக ஆட்சிக்கு வந்தால் பாலாறும் தேனாறும் ஓடுவதாக கூறினார்கள். கள்ளச்சாராயம்தான் ஆறாக ஓடுகிறது.

கள்ளச்சாராயம் குடித்தவர்கள் 14 பேர் உயிரிழந்துள்ளனர். 50க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இப்போது காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து மாநிலம் முழுவதும் பலரை கைது செய்கின்றனர். முன்போ நடவடிக்கை எடுத்திருந்தால் இத்தனை உயிர்களை இழந்திருக்க தேவையில்லை.
கள்ளச்சாராயத்தை பற்றி பாடிய சமூக ஆர்வலர்கள் எல்லாம் இப்போது எங்கே போனார்கள்? நடிகர்கள் யாரும் இப்போது வாயை திறக்கவில்லையே என்றும் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பியுள்ளார். இந்த மரணங்களுக்கு தார்மீக பொறுப்பேற்று முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.
-
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்! -
சிலர் சிரிப்பார்! சிலர் அழுவார்! நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகின்றோம்! திமுகவால் புலம்பும் மதிமுக -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
இன்னொரு ரவுண்டு மழை.. இந்த மாவட்டங்களுக்கு ஜில் அப்டேட்! குட் நியூஸ் சொன்ன வானிலை மையம் -
மதுரைக்காரர் பிடிஆர்! இனி மயிலாப்பூர்காரர்! தொகுதி மாறுகிறார் பழனிவேல் தியாகராஜன்! ஸ்டாலின் முடிவு? -
ரிஸ்க் எடுக்க தயங்கும் எடப்பாடி? திணறும் ரத்தத்தின் ரத்தங்கள்! ஸ்டாலின் பாணியில் செக் வைக்காதது ஏன்? -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட் -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications