ரொமான்டிக் குரங்கிடம் மாட்டிய சிறுவன்... சிலையாக மாறியும் விடாமல் ஒரே இச்சு... வைரல் வீடியோ!
விருதுநகர்: காரியாபட்டி அருகே சாலை மறைக்குளம் கிராமத்தில் சுற்றித் திரியும் ஒற்றை குரங்கிடம் சிக்கிய ஒரு சிறுவன் சிலையாக மாறி தப்பிய வீடியோ காட்சி வைரலாகி வருகிறது.
Recommended Video
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே சாலை மறைக்குளம் கிராமத்தில் ஒற்றை குரங்கு ஒன்று ஊரில் சுற்றி பலரையும் அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில் அந்த குரங்கானது தெருவில் வருவோர், போவோரை துரத்தி கடித்து வருகிறது.
தற்போது வரை பதினைந்துக்கும் மேற்பட்ட நாய்களை கடித்து குதறி உள்ளதாக அப்பகுதியினர் கூறுகின்றனர். இதனால் அப்பகுதியினரும், நாய்களும் அந்த குரங்கை பார்த்தாலே அலறி அடித்து ஓடுகின்றனர்.

வனத்துறை
குரங்கை பிடிக்க வனத்துறையினருக்கு கிராமத்தினர் தகவல் கொடுத்துள்ளதாக கூறுகின்றனர். இந்நிலையில் கிராமத்தின் பள்ளி சுவரின் மீது அமர்ந்திருந்த 10 வயது சிறுவன் பாரதி அருகில் திடீரென குரங்கு வந்துள்ளது. இந்நிலையில் சிறுவனோ செய்வதறியாது சிலை போல் அமர்ந்திருந்தான்.

சேட்டை
இருப்பினும் குரங்கு அச்சிறுவனை விடுவதாக இல்லை. சுமார் 7 நிமிடங்கள் வரை அச்சிறுவனை அசைத்தும், முத்தம் கொடுத்தும் பல விதங்களில் அச்சிறுவனை அசைக்க முயற்சி செய்தது. சிறுவனோ குரங்கின் சேட்டைக்கு பிடிகொடுக்காமல் சிலை போல் அமர்ந்திருந்தான்.

வீடியோ
சிறிது நேரம் கழித்து குரங்கு தானாக சென்று விட்டது. அதனைத் தொடர்ந்து அச் சிறுவன் குரங்கிடம் இருந்து தப்பி ஓடியுள்ளான். இதனை பார்த்துக் கொண்டிருந்த மற்றொரு நபர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சிறுவன்
குரங்கிடம் பிடிபட்ட சிறுவன் அதன் கடிக்கு ஆளாகாமல் சாமர்த்தியமாக சிலை போல் நடித்தான். அந்த குரங்கு அந்த சிறுவனை அசைத்து பார்த்து பார்த்து சோர்ந்தே போய்விட்டது என சொல்லலாம். அந்த அளவுக்கு நடிப்பில் பின்னி பெடலெடுத்துவிட்டார் அந்த சிறுவன்.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications