சிவகாசி அருகே அரசுப்பள்ளி ஆசிரியரை அரிவாளால் வெட்டிய மாணவர்கள்! படிக்கச்சொல்லி கண்டித்ததால் ஆத்திரம்
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே அரசுப்பள்ளி ஆசிரியரை 11ஆம் வகுப்பு மாணவர்கள் இருவர் அரிவாளால் வெட்டிய நிகழ்வு பள்ளிக்கல்வித்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருத்தங்கல் எஸ்.ஆர்.என்.அரசு மேல்நிலைப்பள்ளியில் பொருளாதார துறை ஆசிரியராக இருப்பவர் கடற்கரை. இவர் 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எக்னாமிக்ஸ் வகுப்பு எடுத்து வருகிறார். இந்நிலையில் அரையாண்டு தேர்வு நெருங்குவதால் 11ஆம் வகுப்பு மாணவர்கள் இருவரை படிக்கச் சொல்லி கண்டித்திருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த அந்த 2 மாணவர்களும் ஆசிரியர் கடற்கரையை தாக்க திட்டமிட்டு வீட்டிலிருந்தே அரிவாளை எடுத்து வந்திருக்கின்றனர்.

இந்நிலையில் இன்று காலை வகுப்பில் நடத்திய பாடத்தை படித்து விட்டு வந்திருக்கீங்களா இல்லையா என ஆசிரியர் கடற்கரை மாணவர்கள் இருவரிடமும் வினவி கண்டித்திருக்கிறார். இதையடுத்து பையில் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து ஆசிரியர் கடற்கரை தலையில் ஒரே போடாக போட்டு வெட்டி விட்டு அவர்கள் பள்ளியை விட்டு தப்பியோடியிருக்கின்றனர்.
இதையடுத்து தலையில் வெட்டுக்காயத்துடன் திருத்தங்கல் அரசு மருத்துவமனைக்கு சென்ற ஆசிரியர் கடற்கரைக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து தலையில் கட்டு போட்டுவிட்டனர். இதனிடையே இது குறித்து வழக்குப்பதிவு செய்த திருத்தங்கல் போலீஸார் ஆசிரியர் கடற்கரை மற்றும் பள்ளியில் உள்ள மற்ற மாணவர்களிடம் நடந்த நிகழ்வு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். படிக்கச் சொல்லி கண்டித்ததால் ஆசிரியர் தலையை மாணவர்கள் பதம் பார்த்த நிகழ்வு தமிழகம் தழுவிய அளவில் கவனம் ஈர்த்துள்ளது.
ஒரு காலத்தில் ஆசிரியர்களை பார்த்தாலே ஊரில் ஓடி ஒளிந்த காலமெல்லாம் மலையேறி, இன்று ஆசிரியரையே தாக்கும் அளவுக்கு காலங்கள் மாறிவிட்டது. ஆசிரியர்களை எதிர்த்து பேசினால் நமது மதிபெண்களில் கைவைத்து விடுவார்களோ என்று அஞ்சியவர்கள் 90s கிட்ஸ். ஆனால் 2k கிட்ஸோ எதற்கும் துணிந்தவர்களாக ஆசிரியர்களையே என்னவென்று கேட்கும் அளவுக்கு இருக்கிறார்கள்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications