விருதுநகர் பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து.. 2 பேர் பலி.. பலர் படுகாயம்
Subscribe to Oneindia Tamil
விருதுநகர்: ஆர்.ஆர் நகரில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 3 அறைகள் முற்றிலும் தரைமட்டமானது. இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர் பலர் படுகாயமடைந்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் ஆர்.ஆர். நகரில் முருகேசன் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் 15க்கும் மேற்பட்ட அறைகளில் இன்றைய தினம் காலையில் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

பட்டாசு ஆலையில் மருந்து கலக்கும் அறையில் திடீரென ஏற்பட்ட உராய்வில் வெடித்து சிதறியது. இதில் 3 அறைகள் தரைமட்டமானது. அறையில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியாகினர். 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்த தொழிலாளர்கள் உடனடியாக விருதுநகர் மாவட்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications