Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காட்டுக்குள் தனிமை.. பார்த்துவிட்ட சிறுவன்.. விருதுநகர் கள்ளக்காதல் ஜோடி அடுத்தடுத்து விபரீத முடிவு

Subscribe to Oneindia Tamil

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அழகாபுரி என்ற கிராமத்தில் தனிமையில் இருந்ததை சிறுவன் பார்த்து விட்டதால் கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருமணத்தை மீறி காதல் உறவுகள், கள்ளக்காதலாக இன்று பல ஊர்களில் தொடர்கிறது. ஒருவரை திருமணம் செய்த பின்னர் திடீரென இன்னொருவர் மீது ஈர்ப்பு ஏற்பட்டு காதல் ஏற்படுகிறது. பெரும்பாலும் இந்த காதல் காமம் சார்ந்ததாக இருக்கிறது. இந்த காதலை வெளியில் சொல்லவும் முடியாமல், கணவன், குழந்தைகளை பிரியவும் முடியாமல் தொடர்கிறார்கள். இது கடைசியில் கொலை, தற்கொலையில் தான் முடிகிறது.

A love couple committed suicide near Srivilliputhur in Virudhunagar district

எங்கோ ஒரு மூளையில் தான் சரியான முறையில் விவகாரத்து பெற்று முறைப்படி சேர்ந்து வாழ்கிறார்கள். மற்றபடி கள்ளக்காதல்கள் விபரீதத்தில் தான் போய் முடிகிறது. அப்படித்தான் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் முடிந்துள்ளது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள அழகாபுரியை சேர்ந்த முத்துப்பாண்டி என்பவருடைய மனைவி அமுதா (வயது 40). இவர்களுக்கு குழந்தைகள் இருக்கிறார்கள். இதனிடையே அதே பகுதியை சேர்ந்த ராமமூர்த்தி (40). இவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. இவருக்கும், அமுதாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர்.

இந்தநிலையில் அமுதாவை காட்டுப்பகுதிக்கு வரவழைத்து ராமமூர்த்தி அடிக்கடி ஜாலியாக இருந்துள்ளதாக கூறப்படுகிறது. ஒரு வாரத்துக்கு முன்பு காட்டுப்பகுதியில் இருவரும் நெருக்கமாக இருந்ததாக சொல்லப்படுகிறது. அப்போது, திடீரென அங்கு வந்த ஒரு சிறுவன் இதை பார்த்து விட்டதாக சொல்லப்படுகிறது.

சிறுவன் வெளியில் சொல்லி விடுவானோ என்று பயந்த அமுதா மனவருத்தம் அடைந்து திடீரென விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். இதையடுத்து அமுதாவை சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அமுதா சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்துவிட்டார்.

கள்ளக்காதலி தற்கொலை செய்துகொண்டதை அறிந்த ராமமூர்த்தியும் விஷம் குடித்தார். உயிருக்கு போராடிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு உடனடியாக விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி இறந்து போனார். இந்த சம்பவம் குறித்து ராமமூர்த்தியின் மனைவி பாண்டியம்மாள் கொடுத்த புகாரின் பேரிலும், அமுதாவின் கணவர் முத்துப்பாண்டி கொடுத்த புகாரின் பேரிலும் நத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்)

மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+