'யார்ரா அவன் முரட்டு ஆளா இறங்கி ஓடிக்கிட்டு இருக்கான்'.. ராஜபாளையம் ரயில் நிலையத்தில் ஒரே பரபரப்பு
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ரயில் நிலையத்தை கடந்து சென்ற போது, திடீரென ஒரு இளைஞர், அபாய சங்கிலியை இழுத்து பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலை நிறுத்திவிட்டு இறங்கி ஓட்டம் பிடித்தார். எதற்காக அப்படி செய்தார் என்பதை பற்றி பார்ப்போம்.
ரயிலில் செல்வோர் சில சமயங்களில் இறங்கவேண்டிய ரயில் நிலையத்தை தவற விடும் சூழல் ஏற்படுகிறது. அப்படி தவற விட்டால் அடுத்த ஸடேசனில் தான் போய் இறங்க வேண்டும். உதாரணமாக திருச்சி ரயில் நிலையத்தில் இறங்காமால் விட்டால், அடுத்த 100 கிமீ தூரத்தில் உள்ள திண்டுக்கல் ரயில் நிலையத்தில் தான் இறங்க வேண்டும். இடையில் எந்த ரயில் நிலையத்திலும் பல ரயில்கள் நிற்காது. திருச்சி திண்டுக்கல் ரயில் வழித்தடம் போல், ராஜபாளையம் தென்காசி செங்கோட்டை வழித்தடத்திலும் ரயில்கள் நீண்ட தூரம் தள்ளித்தான் நிற்கும்.

இந்நிலையில் சென்னையில் இருந்து செங்கோட்டைக்கு தினமும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. கடந்த 10ம் தேதி சென்னையில் இருந்து புறப்பட்ட இந்த ரயில் நேற்று காலை 6.30 மணி அளவில் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ரயில் நிலையத்தை வந்தடைந்தது. அங்கு இரண்டொரு நிமிடம் நின்றிருந்த இ்ந்த ரயிலில் இருந்து பயணிகள் இறங்கி உள்ளார்கள்.. அதனைத் தொடர்ந்து ரயில் புறப்பட்டு மெதுவாக சென்று கொண்டு இருந்தது.
ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 300 மீட்டர் தொலைவில் சென்றபோது திடீரென அபாய சங்கிலி இழுக்கப்பட்டதால், என்ஜின் டிரைவர் அதிர்ச்சி அடைந்து ரயிலை நிறுத்தினார். ரயில் நின்றதும் ஒரு பெட்டியில் இருந்து 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர், ரயில் பெட்டியில் இருந்து கீழே குதித்து ஓடினார். இது பயணிகளை அதிர்ச்சி அடைந்தனர்
ரயில் பெட்டியில் பயணிகளிடம் திருடிவிட்டு, அபாய சங்கிலியை இழுத்து ரெயிலை நிறுத்திவிட்டு அந்த நபர் ஓடுவதாக வேகமாக தகவல் பரவியது. ரயில்வே அதிகாரிகள் சம்பந்தப்பட்ட ரயில் பெட்டிக்கு வந்து, பயணிகளிடம் விசாரித்தனர். அப்போது, ராஜபாளையத்தில் இறங்க வேண்டிய அந்த வாலிபர் தூங்கிக்கொண்டு இருந்ததாகவும், ரயில் நிலையத்தில் நின்றுவிட்டு ரயில் புறப்பட்டு சென்றபின் எழுந்த அந்த வாலிபர், இறங்க வேண்டும் என்ற அவசரத்தில் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தியது தெரியவந்தது.
இது குறித்து ரயில்வே போலீசாரிடம் புகார் அளித்தனர். அந்த இளைஞர் யார் என்பது குறித்து தீவிரமாக விசாரித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இளைஞரின் இந்த செயலால் பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில் சுமார் அரை மணி நேரம் தாமதமாக அங்கிருந்து புறப்பட்டு சென்றது. மேலும் அந்த வழியாக செல்ல இருந்த மற்ற ரயில்களும் சற்று தாமதமாகவே வந்து சென்றன.
-
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
தவெக அருண்ராஜ் படத்துடன்.. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்! -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கொட்டிய ஆலங்கட்டி மழை.. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஐஸ் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி! -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
Annamalai: 80 சீட்+ துணை முதல்வர் பதவி? பாஜக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? அண்ணாமலை கொடுத்த விளக்கம் -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு!












Click it and Unblock the Notifications