அருப்புக்கோட்டையில் பெட்ரோல் போட்டால் அற்புதமான ஆஃபர்.. முண்டியடிக்கும் வாகன ஓட்டிகள்
விருதுநகர்: அருப்புக்கோட்டை அருகே பெட்ரோல் பங்க் ஒன்றில் ஒரு லிட்டர் பெட்ரோல் போட்டால் ரூ 50 க்கு பெட்ரோல் இலவசம் என்ற ஆஃபர் வாடிக்கையாளர் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
Recommended Video
தமிழகத்தில் பெட்ரோல் டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்துள்ளது. பெட்ரோல் டீசல் விலையை அன்றாடம் எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்து வருகின்றன.
இந்த நிலையில் லிட்டருக்கு ரூ 100- ஐ பெட்ரோல் விலை தாண்டியதால் வாகனங்களுக்கு பெட்ரோல் போட பணம் இல்லாமல் ஏழை, நடுத்தர மக்கள் தவிக்கிறார்கள்.

இரு சக்கர வாகனங்கள்
இரு சக்கர வாகனங்களிலேயே வேலை நிமித்தமாக பயணிக்கும் நபர்கள் மிகவும் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். இந்த நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக்கோட்டை அருகே குலசேகரநல்லூரில் உள்ள தனியார் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் கவர்ச்சிகரமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ரூ 100 க்கு பெட்ரோல்
அந்த வகையில் வாகனங்களுக்கு ரூ 100க்கு பெட்ரோல் போட்டால் ரூ 1 தள்ளுபடி என டோக்கன் வழங்கப்படுகிறது. இவ்வாறு அந்த நிறுவனம் வழங்கும் 50 சிறப்பு டோக்கன்களை கொடுத்துவிட்டு 50 ரூபாய்க்கு பெட்ரோலை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.

வாகன ஓட்டிகள் ஆர்வம்
இதனால் வாகன ஓட்டிகள் ஆர்வத்துடன் பெட்ரோல் நிரப்பி வருகிறார்கள். அது போல் ரூ 1000 த்திற்கு டீசல் நிரப்பினால் 50 பைசா தள்ளுபடி என டோக்கன் வழங்கப்படுகிறது. இதையடுத்து கணிசமாக சேர்த்து கொடுத்தால் டீசல் விலையில் தள்ளுபடி பெறலாம்.

புதிய சலுகையால் குவியும் மக்கள்
இந்த புதிய சலுகையால் இந்த பெட்ரோல் பங்கில் தினந்தோறும் வாகன ஓட்டிகள் குவிந்தவண்ணம் உள்ளார்கள். இது போன்று மற்ற பெட்ரோல் பங்க்களிலும் சலுகைகள் வழங்கினால் வாகன ஓட்டிகளுக்கு சற்று ஆறுதலாக இருக்கும் என்பதே பொதுவான கருத்தாகும்.












Click it and Unblock the Notifications