அடேங்கப்பா.. ஆட்சியைப் பிடிக்கிறாரோ இல்லையோ.. பெரிய கொடி கம்பத்தைப் பிடிச்சுட்டாரே தினகரன்!
Recommended Video

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அமமுக சார்பில் ஆசியாவிலேயே மிகப்பெரிய 123 அடி உயரத்தில் கொடிக்கம்பத்தில் அமமுக கொடியினை அதன் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஏற்றி வைத்து, நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று இந்தியாவின் பிரதமர் யார் என்பதை தீர்மானிக்கும் சக்தியாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் விளங்கும் என பேசினார்.
எதையாவது செய்து எப்போதும் லைம்லைட்டில் இருக்க வேண்டும்.. இதுதான் அரசியலின் முதல் பாடம். அதை தினகரன் சரியாக செய்து வருகிறார். ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அமமுக சார்பில் ஆசியாவிலேயே மிகப்பெரிய 123 அடி உயரத்தில் கொடிக்கம்பத்தில் அமமுக கொடியினை ஏற்றி வைத்து அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார் .

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் கிருஷ்ணன் கோயில் பகுதியில் அமமுக சார்பில் இந்த கொடிக் கம்பம் நிறுவப்பட்டுள்ளது.
அங்கு கொடியேற்றி வைத்த பின்னர் தினகரன் பேசுகையில், நாடாளுமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று இந்தியாவின் பிரதமர் யார் என்பதை தீர்மானிக்கும் சக்தியாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் விளங்க போகிறது. விருதுநகர் மற்றும் தென்காசி பாராளுமன்ற தேர்தலில் மாபெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று எதிரிகளையும், துரோகிகளையும் வீழ்த்த வேண்டும் என்றார் தினகரன்.

இந்த நிகழ்ச்சியில் ஆண்கள்,பெண்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இந்த கொடிக்கம்பம் குறித்துத்தான் அக்கம் பக்கத்தில் பலத்த பேச்சாக உள்ளது. பலரும் திரண்டு வந்து வேடிக்கை பார்த்துச் செல்கிந்ன்னர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications