“பேஷ் பேஷ் மாமா”.. ராஜேந்திர பாலாஜி போட்டு கொடுத்த டீயை குடித்த விஜய பிரபாகரன் ரியாக்ஷனை பாருங்க!
விருதுநகர்: தேர்தல் பரப்புரையின்போது அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி போட்டுக் கொடுத்த டீயை குடித்துவிட்டு விருதுநகர் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் கொடுத்த ரியாக்ஷன் என்ன தெரியுமா?
நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அரசியல் கட்சித் தலைவர்கள் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் மற்றும் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள், வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

விருதுநகர் லோக்சபா தொகுதியில் அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பாக விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் போட்டியிடுகிறார். திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் மாணிக்கம் தாகூர் மீண்டும் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் ராதிகா சரத்குமார் போட்டியிடுகிறார். இதனால், விருதுநகர் தேர்தல் களத்தில் அனல் பறக்கிறது.
இந்த நிலையில், அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் விஜய பிரபாகரனுக்கு ஆதரவாக அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வாக்கு சேகரித்தார். விருதுநகர் பழைய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள டீ கடை ஒன்றில், ராஜேந்திர பாலாஜி தானே டீ போட்டு வேட்பாளர் விஜய பிரபாகர் மற்றும் கட்சியினருக்கு கொடுத்தார்.
ராஜேந்திர பாலாஜி போட்டுக் கொடுத்த டீயை குடித்த விஜய பிரபாகரன், "பேஷ் பேஷ் மாமா" என கிண்டலாகக் கூறினார். இதையடுத்து, அங்கிருந்த கட்சி நிர்வாகிகள் சிரித்தனர். ராஜேந்திர பாலாஜி போட்ட டீயை, அதிமுக, தேமுதிக நிர்வாகிகள் பலரும் ரசித்து குடித்தனர். இதையடுத்து தொடர்ந்து அவர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
ராஜேந்திர பாலாஜி கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராகச் செயல்பட்டார். இந்நிலையில், விருதுநகரில் டீ கடையில் தானே டீ போட்டு சூடாக நிர்வாகிகளுக்கு கொடுத்து பரபரப்பாக பிரச்சாரத்தில் ஈடுபட்டதை அப்பகுதியினர் வியந்து பார்த்தனர்.












Click it and Unblock the Notifications