திமுக இளைஞரணி மாநாடு.. இருக்கைகளில் ஸ்நாக்ஸ் பைகள்.. பிரியாணி ரெடி! தடபுடல் ஏற்பாடுகள்!
விருதுநகர்: திமுக இளைஞரணி நிர்வாகிகள் மாநாடு விருதுநகர் மாவட்டம் கல்குறிச்சியில் நடைபெறும் நிலையில், இந்த மாநாட்டில் பங்கேற்கும் நிர்வாகிகளுக்காக ஸ்நாக்ஸ், குடிநீர் பாட்டில் , ஜூஸ் அடங்கிய பைகள் நாற்காலிகளில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் பிரியாணியும் வழங்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அனைத்து கட்சிகளும் தேர்தல் வேலைகளில் தீவிரமாக இறங்கி உள்ளன. அந்த வகையில் திமுகவும் தனது கட்சி கட்டமைப்பை வலுப்படுத்தும் வேலையில் மும்முரம் காட்டி வருகிறது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் மதுரையில் பொதுக்குழு கூட்டம், அதைத் தொடர்ந்து உடன்பிறப்பே வா சந்திப்பு, கரூரில் திமுக முப்பெரும் விழா, திமுக இளைஞரணி சார்பில் திருவண்ணாமலையில் வடக்கு மண்டல மாநாடு, திருப்பூர் மற்றும் தஞ்சையில் மகளிர் அணி சார்பில் வெல்லும் தமிழ்ப் பெண்கள் மாநாடு என திமுக தொடர்ச்சியாக தீவிரம் காட்டி வருகிறது.
அதன் தொடர்ச்சியாக, விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே கல்குறிச்சியில் இன்று தென் மண்டல இளைஞரணி மாநாடு நடைபெறுகிறது. தமிழகம் தலை குனியாது என்ற தலைப்பில் நடைபெறும் இந்த மாநாட்டில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற இருக்கிறார்.
தேர்தலை எதிர்நோக்கி, திமுகவின் இளைஞர் அணி, மகளிர் அணி மாநாடுகள் அடுத்தடுத்து மண்டல வாரியாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், விருதுநகர் மாவட்டம் கல்குறிச்சியில் திமுக இளைஞரணி தென் மண்டல மாநாடு இன்று மாலை நடைபெறுகிறது. இதில் 20 திமுக அமைப்பு மாவட்டங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.
இதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. தென் மண்டலத்தை சார்ந்த மாவட்ட, மாநகர, ஒன்றிய நகர, பேரூராட்சி அலுவலக இளைஞரணி நிர்வாகிகள் உள்பட சுமார் ஒன்றரை லட்சம் பேர் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனர். மாநாட்டுக்காக ஏறத்தாழ 100 ஏக்கர் பரப்பளவில் முன்னேற்பாடுகள் பிரம்மாண்டமாக நடைபெற்றன.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்பவருக்கு பிஸ்கட், குடிநீர் பாட்டில், நொறுக்குத் தீனி, கடலை மிட்டாய், ஜூஸ் பாட்டில் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய சிற்றுண்டி பை வழங்கப்படுகிறது. இளைஞரணி நிர்வாகிகள் அமர்வதற்காக போடப்பட்டுள்ள நாற்காலிகளில் இந்த சிற்றுண்டி பை ரெடியாக வைக்கப்பட்டுள்ளது. மேலும், அனைவருக்கும் மட்டன் பிரியாணி வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஒரு லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிர்வாகிகளுக்காக சுத்தமான முறையில் சுகாதாரமான முறையில் சுடச்சுட பிரியாணி செய்யப்பட்டு வருகின்றன. திமுக இளைஞரணி மாநாட்டில் பங்கேற்கும் நிர்வாகிகள் அனைவருக்கும் மட்டன் பிரியாணியை சுகாதாரமான முறையில் தயார் செய்து அனைத்து பிரியாணியையும் பேக் செய்து வாகனங்களில் கொண்டு செல்லப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.
-
175 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டி! திமுக கூட்டணியில் எந்த கட்சிக்கு எத்தனை சீட்? லிஸ்ட்! -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு -
எடப்பாடி பழனிச்சாமி சாமர்த்தியம்.. பாஜகவை கண்ட்ரோல் செய்துட்டாரே.. தொகுதி ஒதுக்கீட்டில் ஓங்கிய அதிமுக கை! -
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி.. கடும் போட்டி கொடுக்கும் அதிமுக! விஜய் நிலைமை.. வெளியான புதிய கருத்து கணிப்பு -
திமுக விட்டுக் கொடுத்துள்ளதால்.. நாங்களும் இறங்கினோம்.. மனம் திறந்த திருமாவளவன் -
நம்பி நம்பி.. வெம்பி வெம்பி.. அல்வா போல அள்ளிட்டுப் போன அண்ணியார்! வேதனையில் திருமா எடுத்த முடிவு! -
2026ல் மீண்டும் திமுக! ஸ்டாலின்தான் முதல்வர்! பாலிமார்க்கெட் கணிப்பு சந்தையில் எகிறும் திமுக கிராஃப் -
இரட்டை என்ஜின் சர்க்கார்.. ‘ஓபிஎஸ் - இபிஎஸ்’அணி சந்தித்த கடைசி தேர்தல் - 2021 ரீவைண்ட்! -
கள்ளக்குறிச்சியை கையில் எடுத்த திருமாவளவன்! விசிகவின் 15 Stronghold உத்தேச பட்டியல்! -
சர்ச்சை பேச்சு விவகாரம்.. முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு மீண்டும் சம்மன் அனுப்ப நீதிமன்றம் உத்தரவு! -
எங்க வந்து யாருக்கிட்ட.. கொங்கு மண்டலத்துக்கு உதயநிதி மாஸ் பிளான்.. களமிறங்கும் இளைஞரணி -
மதுரை தெற்கில் பாஜக வெல்லுமா.. செளராஷ்டிரா வாக்குகளை நம்பும் ராம சீனிவாசன்.. பூமிநாதன் சமாளிப்பாரா?












Click it and Unblock the Notifications