இந்திக்காரனை உள்ளே வெச்சிக்கிறீங்க.. நம்ம ஆளுங்களை வெளியே போட்டிருக்கீங்க.. டோல்கேட்டில் மொழி போர்!
சாத்தூர் சுங்க சாவடியில் வாக்குவாதம் செய்யும் நபரின் வீடியோ வைரலாகிறது
Recommended Video
விருதுநகர்: "ஏங்க.. இந்திக்காரனை ஃபுல்லா உள்ளே வெச்சிக்கிறீங்க.. நம்ம ஆளுங்களை வெளியே போட்டுக்கிறீங்களே.. அடிமை மாதிரி.. என்னங்க இது" என்று சுங்கசாவடியில் வாகன ஓட்டி ஒருவர் கேள்வி எழுப்பும் வீடியோ வைரலாகிறது.
சாத்தூர் சுங்கச் சாவடியில் நைட் நேரத்தில் இந்த வாக்குவாதம் நடந்துள்ளது. ஒரு கார் வருகிறது. அந்த காரை மடக்கி சோதனை நடக்கிறது போலும். இது சம்பந்தமாக சுங்கசாவடி ஊழியர்களும், காரின் பின் சீட்டில் இருந்தவர்களும் வாக்குவாதம் செய்து கொள்கிறார்கள்.
அப்போது கம்ப்ளைன்ட் புக் அதாவது புகார் பதிவேடு தந்து எழுத சொல்கிறார்கள் சுங்கசாவடி ஊழியர்கள். ஆனால், அந்த புகார் பதிவேடு ஆங்கிலத்தில் இருந்தது. இதை பற்றிதான் அவர்கள் வாதம் செய்தனர்.

கவர்ன்மென்ட்
"ஏங்க.. நீங்க பாட்டுக்கு இங்கிலீஷ்-ல கம்ப்ளைண்ட் புக் தந்தா எப்படி எழுதறது? தமிழில் இல்லையா?" என்று கேட்கிறார். அதற்கு சாவடி ஊழியர்கள், "ஹலோ.. இது சென்ட்ரல் கவர்ன்மென்ட் சார்.. நாங்களா இப்படி தர்றோம்.. இங்கிலிஷ்ல தான் புக் இருக்கு. அதை எல்லாம் படிச்சி பார்க்காம, பேசாம எழுதிட்டு போங்க" என்கிறார்கள்.

புத்தகம்
"அது எப்படி முடியும்? எங்க மொழியில குடுத்தாதானே நாங்க புகார் எழுத முடியும்? இங்கிலீஷ் புத்தகத்தை நீட்டினால் எப்படி எழுதுவோம். இந்த பக்கமாக வர்ற எல்லாருக்குமே இங்கிலீஷ் தெரியும்ன்னு எப்படி நினைக்கிறீங்க? என்னன்னு எழுதுவாங்க? " என்று கார்காரர் கேள்வி எழுப்புகிறார்.

உள்ளே வராதே
அந்த நேரம் பார்த்து, ஒரு இந்திக்கார ஊழியர் குறுக்கில் புகுந்து, ஏதோ பேசுகிறார். இதனால் கடுப்பான கார்காரர், "நீ பேசாதே.. எங்க ஆளுங்க கிட்ட நான் பேசிட்டு இருக்கேன். எங்க ஆளுங்களா இருக்க போயிதான் மரியாதை தந்து பேசிட்டு இருக்கேன். நீ இதுக்கு உள்ளே வராதே" என்று சொல்லிவிட்டு, அங்கிருந்த ஊழியர்களிடம், "ஏங்க.. இந்திக்காரனை ஃபுல்லா உள்ளே வெச்சிக்கிறீங்க.. நம்ம ஆளுங்களை வெளியே போட்டுக்கிறீங்களே.. அடிமை மாதிரி.. என்னங்க இது?" என்று கேள்வி எழுப்புகிறார்.

வாதம்
அதற்கு சுங்கசாவடி ஊழியர், "ஏன்.. நீங்களே கான்ட்ராக்ட் எடுங்களேன். அதுல நம்ம ஆட்களை வேலைக்கு வைங்களேன்" என்கிறார். "அப்படி இல்லீங்க.. அந்தந்த மாநில மொழிகளுக்கு முக்கியத்துவம் தரணும் இல்லையா" என்கிறார். அதற்கு சுங்கசாவடி ஊழியர்கள், "கர்நாடகாவுக்கு போனீங்கன்னா, அந்த மொழியில்தான் எழுதணும்னு சொல்லிட்டால், அங்கே எப்படி எழுதுவீங்க? என்று கேட்கின்றனர். அதற்கு கார்காரர், "நாங்க ஏங்க.. அங்கு போய் எழுதணும்" என்று அந்த வாதம் தொடர்கிறது. இந்த வீடியோதான் வைரலாகிறது.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications