எதாச்சும் செஞ்சு உள்ளாட்சியை பிடிக்கணும்.. அப்பத்தான் நமக்கு டெண்டர்.. ராஜேந்திர பாலாஜி
விருதுநகர்: எப்படியாவது உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்றும், அப்படிச் செய்தால் தான் டெண்டர் நமக்கு கிடைக்கும் என்று அதிமுக தொண்டர்களிடம் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியுள்ளார்.
விருதுநகரில் நேற்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களிடம் பேசுகையில், டிடிவி தினகரனுடன் இருப்பவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதற்கு பாலியல் புகாரில் சிக்கியுள்ள பெரியகுளம் கதிர்காமுவே சாட்சி.
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு மத்தியில் அமைந்த பின்னர்தான் தமிழக மீனவர்கள் மற்றும் இலங்கை தமிழர்கள் பாதுகாக்கப்படுகிறார்கள்.
50 வயதான அன்புமணி போன்ற இளைஞர்களே நாட்டுக்கு தேவை... பிரேமலதா கிண்டல்
இலங்கை தமிழர்களில் ஒருவர் இனி இலங்கை ராணுவத்தால் கொல்லப்பட்டாலும் இலங்கை ராணுவம் பல உயிர்களை இழக்க வேண்டியது வரும் . இந்திய கடல் எல்லையில் மீனவர்களுக்காக இயந்திர துப்பாக்கியுடன் இந்திய ராணுவ வீரர்களை நிறுத்தி பாதுகாப்பு கொடுப்போம் என்றார்.
அருப்புக்கோட்டையில் தொண்டர்கள் மத்தியில் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, கட்சியும் ஆட்சியும் நம்ம கிட்ட இருந்தா தான் பலம். அப்பத்தான் போலீஸ், தலையாரி கூட நம்ம சொல்றத கேட்பாங்க. மக்களவை தேர்தல் முடிஞ்ச இரண்டு மாசத்துல உள்ளாட்சி தேர்தல் வரும். எனவே என்ன முயற்சிகள் செய்தாவது உள்ளாட்சி தேர்தலில் நாம் ஜெயிக்க வேண்டும். அப்படி ஜெயிச்சாத்தான் நமக்கு வேண்டிய டெண்டர்களையும், வேலைகளையும் எடுக்க முடியும் இவ்வாறு கூறியுள்ளார்.